Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

சாலியர் சமுதாய மாளிகை மராமத்து பணிகள் பற்றிய அறிவிப்பு

 





சாலியர் சமுதாய மாளிகை மராமத்து பணிகள் பற்றிய அறிவிப்பு


நமது மக்கள் சென்னைக்குச் சென்றால் தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான, குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு உயரிய எண்ணத்தில் நம் சமுதாயப் பெரியவர்களின் பெரும் முயற்சியால் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் பங்களிப்போடு, சென்னை 600 033, மேற்கு மாம்பலம், கணபதி தெரு, கதவு எண். பழையது 25, புதியது 53 என்ற முகவரியில் ஒரு சமுதாய மாளிகை கட்டப்பட்டு கடந்த 1997 ம் வருடம் திறந்து வைக்கப்பட்டு அதுநாள் முதல் நம் சமுதாய மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை மாநகருக்கு செல்லும்போது தங்குவதற்கு பெரும் உதவியாக இருந்தது. கடந்த 26 வருடங்களாக நம் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, குறைந்த வாடகையில் தங்குவதற்கு இடமளித்து வந்த நம் சமுதாய மாளிகை, பராமரிப்புப் பணிகளுக்காக வரும் 01.05.2023 நாள் முதல் பராமரிப்பு பணி முடியும் வரை தங்கும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து வந்த நிலையில், சாலியர் மாளிகைக் கட்டிடத்தில் பெரும் மராமத்து வேலைகள் செய்ய வேண்டிய நிலையில், கட்டிடத்தில் நம் மக்கள் தங்கியிருக்கும்போதே மராமத்து வேலைகள் செய்ய இயலாத வகையில் அதிகமான வேலைகள் இருப்பதால் கடந்த 16.04.2023 அன்று நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில் உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, வேறு வழியின்றி தங்கியிருக்கும் அனைவரும் தற்காலிகமாக 30.04.2023 க்குள் காலி செய்யவும், மராமத்து பணிகள் முடிந்தவுடன் மீண்டும் தங்குவதற்கு அனுமதிக்கவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் அறிவிப்பு இங்கு தகவலுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே நம் சமுதாய மக்கள் அனைவரும் சிரமத்தை பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்வதுடன், இத்தகவலை நம் சாலியர் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தெரிவிப்பதன் மூலம், விபரம் தெரியாமல் யாரும் சென்னை சென்று சாலியர் மாளிகையில் தங்குவதற்கு இடமில்லாமல் சிரமப்படுவதை தவிர்க்க உதவி செய்ய வேண்டும். 

சென்னை சாலியர் சமுதாய மாளிகையின் தொலைபேசி எண். 044 24803127