Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 11 அக்டோபர், 2019

மாணவர்களின் முன்னேற்றத்தில் கோ 4 குரு இணையத்தின் பங்கு


 Web
நமது சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரால் நடத்தப்படும் கோ 4 குரு இணையதளம்> இணைய வழியில் டியூசன் நடத்துதல் மற்றும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா சுற்றுலா போன்ற பல சேவைகளை செய்து வரும் ஒரு கல்விக்கான இணையதளம்.

கடந்த மாதம் ஒரு முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரை தமிழகத்தில் உள்ள பல கல்வி நிலையங்களுக்கு அழைத்து வந்து மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மிகச்சிறந்த கல்விப்பணி ஆற்றியது இந்த இணையதளத்தை நடத்தும் நிறுவனம்.

இந்திய தலைமை அலுவலகத்தை ராஜபாளையம் நகரிலும், அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்திலும் நடத்தி, இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு பாடம், மொழி, இசை போன்ற அனைத்து வித டியூசன் தேவைகளையும் இந்த நிறுவனம் ஒரே இணையதளத்தில் பூர்த்தி செய்கிறது.

இன்றைய காலகட்டத்தில் கல்வி நிலையங்களில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்களது விருப்பமான நேரத்தில் இந்த இணையம் மூலம் தேவைப்படும் கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

தேவைப்படுபவர்கள் இந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு விபரம் அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

வாழ்க்கைத்துணைநலம்


-       அருள்நிதி S ஜெயபிரகாஷ்
முதுநிலை பேராசிரியர் & கூடுதல் இயக்குனர்
உலக சமுதாய சேவா சங்கம்

Email id -  jpmalajp@gmail.com 


குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைய கணவனும், மனைவியும் மனம் ஒன்றியவர்களாக இருக்கவேண்டும். ஆனால் இயற்கையில் படைப்பிலே ஆணுக்கும், பெண்ணுக்கும் மனப்பான்மையிலே பலப்பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. இது தவிர சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படியெனில் கணவனுக்கும், மனைவிக்கும் மனம் எப்படி ஒன்றாகும்? மோதல்கள்தானே சாத்தியம் - - எப்படி இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்?

கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரிடம் காணும் குறைகளில் முதலில் இடம் பெறும் பத்து குறைகள் :

1 . சுயநலம்
2 . ஊதாரித்தனமான செலவு
3 . வம்பு பேசுதல்
4 . சீண்டிக்கொண்டே இருத்தல்
5 . வீட்டில் கவனமின்மை
6 . ஆதிக்க மனப்பான்மை
7 . வெளி விவகாரங்களில் அதிக அக்கறை
8 . சுத்தக் குறைவு
9 . இன்னொரு ஆணிடமோ, பெண்ணிடமோ ஈடுபாடு &
10 . அலட்சியப் படுத்தல்

இவ்வளவு குறைகள் இருந்தாலும் மனம் ஒன்றிய தம்பதியர்கள் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டாலும் உடனே சமாதானமாகி வாழ்க்கைக்கு மேலும், மேலும் சுவை ஊட்டுவார்கள். இதை உணர்த்தத்தான் நம் முன்னோர்கள் புராணங்களிலே தெய்வீகத் தம்பதியர்களான சிவன் - பார்வதி, விஷ்ணு - லெட்சுமி, ப்ரம்ஹா - சரஸ்வதி இவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, சமாதானம் அடைந்து பல உண்மைகளை உலகுக்கு உணர்த்துவதாக கதைகளை அமைத்தனர்,

கணவன் - மனைவி இருவருமே தங்களிடையே வரும் சண்டைகளை ஊடலாய் நினைத்து உடனே சரி செய்ய வேண்டும். இம்மாதிரி சண்டைகளில் கோபத்தைத் தவிர்த்து மன்னிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கணவன் எதிர்ப்பார்க்கக்கூடாது. சண்டையிலே மனைவியை வெல்ல அனுமதித்து கணவன் தோற்க வேண்டும்! அப்படித் தோற்ற கணவர்கள்தான் வெற்றிகரமான குடும்பத் தலைவர்களாக திகழ்கின்றார்கள்!

ஏனெனில், " வெற்றி " பெற்ற மனைவி
கணவனிடம் தன உள்ளத்தை பறி கொடுத்து
அவன் சொல் கேட்கும்
அன்பு அடிமையாக
மாறி விடுகின்றாள்!

வாழ்க வளமுடன்!


திங்கள், 7 அக்டோபர், 2019

மருந்து இன்றி நீரிழிவு நோயை குணப்படுத்த ஒரு சில யோசனைகள்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 இல் இயற்றப்பட்ட பின்னர் 1945, 1995 இல் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த சட்டத்தில் செட்டியூல் j' என்ற பிரிவின் ஆங்கில மருத்துவத்தினால் குணப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள ஐம்பத்தொரு வகை  வியாதிகளில்14வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்.

சர்க்கரை நோய்க்கான காரணங்களை கண்டு பிடித்தால் அன்றி அதை குணப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளலாம்.

நமது உடலில் இரைப்பைக்கு அருகில் உள்ள இந்த கணையம் என்னும் சுரப்பி இன்சுலினை சுரக்கின்றது. இதன் ஜீரண திரவமானது (Digestive juice) கார்போஹைட்ரேட் புரோட்டீன் மற்றும் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது.இந்த சுரப்பி உற்பத்தி செய்யும் "இன்சுலின்" ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அட்ரீனல் சுரப்பியின் தேவைக்கு ஏற்ப கணையம் ஆனது தனது பணியை மெதுவாக்கிக் கொண்டு அதிகமாக சர்க்கரை குளுக்கோஸ் தேவையான பாகங்களுக்கு செல்ல அனுமதிக்கிறது.

அதிக உணர்ச்சி வசப்படுவதாலும், கவலைகள் ஏற்படும் போதும் அட்ரினல் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் பொழுதெல்லாம் கணையம் ஆனது இன்சுலினை சுரக்கும் பணியை மெதுவாக்கி கொள்கிறது. இந்த நிலை வருடக்கணக்கில் நீடிக்கும் பொழுது கணையம் மந்த நிலையை அடைந்து அதனாலேயே உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பணி மெதுவாகிறது.

அதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாகி சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் முறையில் அட்ரீனல் சுரப்பியை கட்டுப்படுத்துவதாளும் உணர்ச்சிவசப் படுதலையும், கவலைகளை தவிர்ப்பதாலும் சர்க்கரை நோயை குணப்படுத்தி கொள்ளலாம்.

இந்த சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட உணவு முறைகளை அனுசரிப்பது நலம்.

1. நெல்லிக்காய் 300 கிராம் பொடியுடன் 100 கிராம் சுக்குப் பொடியை கலந்து வைத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து அரை டீஸ்பூன் கலப்படம் இல்லாத தூய மஞ்சள் தூளும் கலந்து காலை, மாலை இருவேளை பருகலாம்.

60 நாட்கள் தொடர்ந்து பருக வேண்டும்.

2. பால் சாப்பிடும் பொழுது சர்க்கரைக்கு பதிலாக சிறிது தூய மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வது ருசியை தருவதுடன் ரத்தம் சுத்தமாகி தோலும் ஆரோக்கியம் ஆகும்.

3. காலையில் வெறும் வயிற்றில் 60 கிராம் பச்சை கொத்துமல்லி இலையிலிருந்து இரண்டு அவுன்ஸ் சாறு எடுத்து 48 நாட்களுக்கு பருகி வரலாம்.

4. மாவிலை 8 முதல் 10 எடுத்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து அப்படியே ஆட்டி சாறெடுத்து 48  நாட்களுக்கு பருகலாம்.

5. தொட்டால் சுருங்கி இலைகள் 10 அரைத்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

இதில் ஏதாவது ஒன்றை 60 நாள் சரியாக செய்து வர உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் அல்லது குணம் ஆகும்.

உணவே மருந்து.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு



          http://www.tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download.php

 புதிதாக புதுப்பிக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

*உங்கள் பெயரை சரியான உள்ளாட்சி மன்ற அமைப்பை தேர்வு செய்து சரிபார்த்து கொள்ளவும்*