மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 இல் இயற்றப்பட்ட பின்னர் 1945, 1995 இல் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்தில் செட்டியூல் j' என்ற பிரிவின் ஆங்கில மருத்துவத்தினால் குணப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள ஐம்பத்தொரு வகை வியாதிகளில்14வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்.
சர்க்கரை நோய்க்கான காரணங்களை கண்டு பிடித்தால் அன்றி அதை குணப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளலாம்.
நமது உடலில் இரைப்பைக்கு அருகில் உள்ள இந்த கணையம் என்னும் சுரப்பி இன்சுலினை சுரக்கின்றது. இதன் ஜீரண திரவமானது (Digestive juice) கார்போஹைட்ரேட் புரோட்டீன் மற்றும் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது.இந்த சுரப்பி உற்பத்தி செய்யும் "இன்சுலின்" ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அட்ரீனல் சுரப்பியின் தேவைக்கு ஏற்ப கணையம் ஆனது தனது பணியை மெதுவாக்கிக் கொண்டு அதிகமாக சர்க்கரை குளுக்கோஸ் தேவையான பாகங்களுக்கு செல்ல அனுமதிக்கிறது.
அதிக உணர்ச்சி வசப்படுவதாலும், கவலைகள் ஏற்படும் போதும் அட்ரினல் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் பொழுதெல்லாம் கணையம் ஆனது இன்சுலினை சுரக்கும் பணியை மெதுவாக்கி கொள்கிறது. இந்த நிலை வருடக்கணக்கில் நீடிக்கும் பொழுது கணையம் மந்த நிலையை அடைந்து அதனாலேயே உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பணி மெதுவாகிறது.
அதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாகி சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் முறையில் அட்ரீனல் சுரப்பியை கட்டுப்படுத்துவதாளும் உணர்ச்சிவசப் படுதலையும், கவலைகளை தவிர்ப்பதாலும் சர்க்கரை நோயை குணப்படுத்தி கொள்ளலாம்.
இந்த சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட உணவு முறைகளை அனுசரிப்பது நலம்.
1. நெல்லிக்காய் 300 கிராம் பொடியுடன் 100 கிராம் சுக்குப் பொடியை கலந்து வைத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து அரை டீஸ்பூன் கலப்படம் இல்லாத தூய மஞ்சள் தூளும் கலந்து காலை, மாலை இருவேளை பருகலாம்.
60 நாட்கள் தொடர்ந்து பருக வேண்டும்.
2. பால் சாப்பிடும் பொழுது சர்க்கரைக்கு பதிலாக சிறிது தூய மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வது ருசியை தருவதுடன் ரத்தம் சுத்தமாகி தோலும் ஆரோக்கியம் ஆகும்.
3. காலையில் வெறும் வயிற்றில் 60 கிராம் பச்சை கொத்துமல்லி இலையிலிருந்து இரண்டு அவுன்ஸ் சாறு எடுத்து 48 நாட்களுக்கு பருகி வரலாம்.
4. மாவிலை 8 முதல் 10 எடுத்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து அப்படியே ஆட்டி சாறெடுத்து 48 நாட்களுக்கு பருகலாம்.
5. தொட்டால் சுருங்கி இலைகள் 10 அரைத்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
இதில் ஏதாவது ஒன்றை 60 நாள் சரியாக செய்து வர உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் அல்லது குணம் ஆகும்.
உணவே மருந்து.