1923ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர்
கே.வி.
போத்தி மூப்பனார்
அவர்களால் தமது
சொந்தத் தறிகளில்
நெய்த வேஷ்டி, சேலைகளை விற்பனை
செய்யும் நிறுவனமாக
துவங்கப்பட்ட போத்தீஸ்
நிறுவனம் அவரது
குமாரர் திரு.
கே.வி.பி. சடையாண்டி மூப்பனார்
அவர்களது நிர்வாகத்
திறமையினால் 1977ம்
ஆண்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர்
நகரில் ஜவுளி
சாம்ராஜ்யத்தின் முதல்
கடை துவங்கப்பட்டு
அப்போதுதான் போத்தீஸ்
என்ற பெயரிடப்பட்டு
வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர்
1986ம் ஆண்டில்
திருநெல்வேலி மாநகரில்
இரண்டாவது கடை
துவங்கப்பட்டது. அந்நாளில்
கேரள மாநிலத்தவர்கள்
அதிகமாக திருநெல்வேலி
நகருக்கு வந்து
ஜவுளி வாங்கிச்
செல்வர்.
அவ்வாறு கேரள
மாநிலத்திலிருந்து வருகை
தந்த தம்
வாடிக்கையாளர்களுக்கு அவர்களது
பயணச் செலவை
போத்தீஸ் நிறுவனமே
ஏற்றுக்கோண்டு அவர்களுக்கு
டிக்கெட் கட்டணத்தை
திருப்பியளித்ததன் மூலமாகவும்
தரத்தில் என்றுமே
சமரசம் செய்யாத
போத்தீPஸ்
நிறுவனத்தை நாடி
மக்கள் கூட்டம்
கடை முழுவதும்
வியாபித்து தம்
குடும்பத்திற்குத் தேவையான
ஆடைகளை வாங்கிச்
சென்றனர்.
ஆடித் தள்ளுபடி
என்பதை சென்னை
மாநகர மக்களுக்கு
அறிமுகப்படுத்தியதே போத்;தீஸ் நிறுவனம்தான் என்று
நம்மி;ல்
பலருக்கு தெரிந்திருக்காது.
சென்னை, தி.நகர், பனகல் பூங்கா
அருகில் போத்தீஸ்
கிளை துவங்கிய
பின்னர்தான் சென்னை
மக்களுக்கு ஆடித்தள்ளுபடி
என்ற விஷயமே
அறிமுகமானது. சென்னை
மாநகரில் போத்தீஸ்
பொட்டிக் எனும்
இரண்டாவது கிளை, ஜி.என்.செட்டி சாலையிலும், மூன்றாவது
கிளையாக போத்தீஸ்
ஹைப்பர் எனும்
மூன்றாவது கிளை
தி.நகர்
பேருந்து நிலையம்
அருகிலும் தம்
சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி
தமிழ்நாடு முழுவதும்
தம் கிளைகளை
பரப்பியிருக்கும் ஆலமரம்
போத்தீஸ்.
தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, நாகர்கோவில், புதுச்சேரி, திருவனந்தபுரம்
மற்றும் தற்போது
பெங்களூரு மாநகர்
என தனது
சாம்ராஜ்ஜியத்தை விரிவு
செய்து வளர்ந்து
வரும் போத்தீஸ்
நிறுவனம் நம்
சாலியர் சமுதாயத்திற்கு
பெருமை தேடித்தந்துள்ளது.
மேலும் சேலம், காஞ்சிபுரம் மற்றும்
சென்னை வேளச்சேரி
பகுதிகளில் கிளைகள்
துவக்க திட்டமிட்டிருக்கும்
போத்தீஸ் நிறுவனம்
அதன் நிர்வாக
இயக்குநர் திரு.
ரமேஷ் போத்தி
மற்றும் அவர்களுக்கு
உறுதுணையாக இருக்கும்;
அவரது சகோதரர்கள்
மற்றும் அனைத்து
ஊழியர்களுக்கும் சாலியர்
குரல் தன்
பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கிறது.
பெங்களூரு நகருக்குச்
சென்ற அனைவருக்கும்
தெரிந்த இடம்
மெஜஸ்டிக் சர்க்;;கிள் மற்றும் கெம்பே
கவுடா சர்க்கிள்.
இங்குதான் பெங்களூரு
நகரின் ரயில்
நிலையம், மாநகர, வெளியூர் பேருந்து
மற்றும் மெட்ரோ
ரயில் நிலையம்
ஆகிய அனைத்தும்
அமைந்துள்ள மாநகரின்
மையப்புள்ளி இது.
.
இங்கு முன்பு
செயல்பட்டு வந்த
சாகர் திரையரங்க
இடம் 33, கெம்பே
கவுடா சாலையில்
தற்போது போத்தீஸ்
நிறுவனத்;தின் பெங்களூரு கிளை
துவங்கப்படுகிறது.
வரும் பிப்ரவரி 26, 2018 திங்கள் கிழமை
காலை 10 மணியளவில்
துவங்கப்பட இருக்கும்
போத்தீஸ் பெங்களூரு
கிளைக்கு நாம்
அனைவரும் நம்
வாழ்த்துக்களையும், ஆதரவையும்
தெரிவிப்பதன் மூலம்
நம் சாலியர்
சமுதாயத்தின் அடையாளமாக
விளங்கும் போத்தீPஸ் நிறுவனம் மென்மேலும்
வளர நம்
வாழ்த்துக்களையும், ஆதரவையும்
தெரிவிக்க வேண்டுகிறோம்.
கட்டுரையாளர்: க.
சங்கிலிக்காளை, தொடர்புக்கு:
9600106471