எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான் எனும் முதுமொழிக்கேற்ப எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த
கல்வி எனும் அறிவு மேம்படச் செய்தல் ஒன்றே உங்களின் வாழ்வில் மிகச் சிறந்த ஒரு சேவையாக
இருக்க முடியும்
சென்னை, மயிலாப்பூரைச்; சேர்ந்த திரு. இரா.
கண்ணன் (இளவேனில்) தன் நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் வாழ்வு மேம்பட
நல்லெண்ணத்துடன் சமுதாயப் பணி செய்து வருகிறார்.
குழந்தைகள் மத்தியில்
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அக்குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல
மாற்றத்தினை ஏற்படுத்தும் சேவையை திறம்பட செய்து வருகிறார்.
தனது தனிப்பட்ட
ஆர்வத்தின்பேரில் குழந்தைகளுக்கான புத்தகங்களை சேகரித்து, சென்னையின் குடிசைப்பகுதி வாழ் குழந்தைகளுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் கிராமப்
பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கும், இரவுப்பாடசாலையில் பயிலும் குழந்தைகளுக்கும்
கொடுத்து அவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி வருகிறார்.
புத்தகங்கள் வாயிலாக
குழந்தைகளிடம் நற்பண்புகள், சமத்துவம், சகோதரத்துவம், நாட்டுப்பற்று, மூடநம்பிக்கையை
ஒழித்தல், அறிவியல் அறிவை வளர்த்தல் போன்ற நல்லவிதமான
மாற்றங்களைக் கொண்டு வர சேவை செய்யும் திரு. இரா. கண்ணன் (இளவேனில்) அவர்களைப் பாராட்ட விரும்புபவர்கள் அவரது
தொடர்பு எண். 88380 01758 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு பாராட்டலாம்.
முடிந்தால் அவரது சேவைக்குறிய குழந்தைகளுக்கான புத்தகங்களை நன்கொடையாக கொடுத்து
உதவலாம்.
தேவையான புத்தகங்கள்:
குழந்தைகளுக்கான எளிய
சிறு நூல்கள்
புடங்களுடன் கூடிய
கதைப் புத்தகங்கள்
நீதிக் கதைகள் கொண்ட
புத்தகங்கள்
தன்னம்பிக்கை ஊட்டக்
கூடிய நூல்கள்
ஆங்கிலப் பேச்சுத்திறனை
வளர்க்கும் நூல்கள்
ஆங்கிலம் தமிழ்
அகராதி
பொது கட்டுரைகள்
தலைவர்களின் வரலாறு
அல்லது சுயசரிதை நூல்கள்
பாரதியார் மற்றும்
பாரதிதாசன் கவிதைகள நூல்கள்.
திருக்குறள் மற்றும்
விளக்கவுரை நூல்கள்
நீங்கள் எந்தவகையில்
உதவலாம்:
புத்தகங்களை வாங்கி
வழங்கலாம்
புத்தகங்களுக்கான
நிதி கொடுக்கலாம்.
தொலைபேசியில் தகவல்
தெரிவித்தால் நேரில் வந்து பெற்றுக் கொள்வார்கள்.
தன்னார்வலராக இணைந்து
கொள்ளலாம்.
ஒரு கோடி கிடைத்தால்
என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு, ஒரு நூலகம் கட்டுவேன் என பதிலளித்தாராம்
மகாத்மா காந்தி அவர்கள்.
தனிமைத் தீவில்
தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக
வாழ்வேன் என பதிலளித்தாராம் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள.
ஒரு குழந்தைக்கு
நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன்
சர்ச்சில்
எனவே உங்கள்
வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகச்சிறந்த சமூக சேவையாக உங்களால் முடிந்த
புத்தகங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் நற்பண்புள்ள
இளைஞர்களாக அக்குழந்தைகள் வளர பேருதவி செய்தவர்களாவீர்கள்.
உங்களின் ஒரு சிறிய
உதவி மூலமாக சமூகத்தில் ஏற்படும் மாற்றமானது பெரும் நன்மைகளை விளைவிக்கும்.
தொடர்புக்கு:
இரா. கண்ணன்
(இளவேனில்) – செல்பேசி எண். 88380 01758
29 காந்தி நகர், சண்முகபுரம், மைலாப்பூர், சென்னை 600 004
கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை, ஆலோசகர்.
தொடர்புக்கு: 9600106471 gsraj1979@gmail.com
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே. சாலியர் குரல் மற்றும் அதன் நிறுவனர், ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் தொடர்புள்ள அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகிய எவருக்கும் எவ்வித பொறுப்பும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவும்.
மேலும் இங்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ள படங்கள், சின்னங்கள் (லோகோ) மற்றும் இணையதள முகவரி ஆகியவை அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தகவலுக்காக மட்டுமே இங்கு அவை பயன்படுத்தப் பட்டுள்ளன.