Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 8 நவம்பர், 2020

புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 https://www.vikatan.com/news/general-news/understand-the-new-income-tax-plan-things-to-look-out-for0




வரி
வரி

எவையெல்லாம் நீங்கள் பெறக்கூடிய சலுகை எனப் புரிந்து கொண்டால் வரி முறையை நீங்கள் தீர்மானிக்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
புதிய வருமான வரித் திட்டம் அறிவித்து, எட்டு மாதங்களுக்குமேல் ஆகிறது. ஆனால், இந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை புதிய வரித் திட்டத்தின் அடிப்படையில் செய்வதா, பழைய வரித் திட்டத்தின்படி செய்வதா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நடப்பு 2020-21–ம் நிதியாண்டுக்கான வருமான வரியை வரிக் கழிவுடன்கூடிய பழைய முறை, வரிக்கழிவு இல்லாத புதிய முறை என இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை ஒருவர் தேர்வு செய்து, அதன்படி வருமான வரியைக் கட்டலாம்.
புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

புதிய வருமான வரி முறை - சில குறிப்புகள்

  • வருமான வரிச் சட்டத்தில் புதிதாக 115BAC பிரிவு சேர்க்கப் பட்டிருக்கிறது. இதன்படி, நடப்பு 2020-21-ம் நிதியாண்டு முதல் அமலாக்கம் பெறுவதுதான் புதிய வருமான வரி முறை.

  • புதிய வரி முறையில் சேர விரும்புவோர் மட்டுமே சம்பளம் போடும் அதிகாரி அல்லது அலுவலக காசாளரிடம் ‘இசைவு’ தெரிவிக்க வேண்டும். இசைவு தெரிவிக்கவில்லை என்றால், அந்த வரிதாரர் பழைய வரி முறையிலேயே உள்ளதாகக் கருதப்படுவார்.

  • வணிக வருமானம் இல்லாதபட்சத்தில், சம்பளதாரர்கள் ஆண்டுக்கு ஆண்டு, வரி அளவைக் கணக்கிட்டு வரி முறையை மாற்றிக்கொள்ளலாம். அதாவது, பழைய முறையில் உள்ளவர், புதிய முறையைத் தேர்வு செய்யலாம். புதிய முறையில் உள்ளவர் பழைய முறைக்கு மாறிக்கொள்ளலாம்.

சம்பளதாரர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி, நகர ஈட்டுப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை தரப்படுகின்றன. இதன்படி ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் பழைய மற்றும் புதிய முறையில் வரிச் செலுத்த வேண்டியதில்லை.

  • பழைய முறையில் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரைக்கும் 20% வரிச் செலுத்த வேண்டும். ஆனால், புதிய முறையில் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையில் வரிக்குரிய வருமானத்துக்கு 10% வருமான வரி கட்டினால் போதும்.

பழைய வரி Vs புதிய வரி

  • பழைய வரி முறையில் சுமார் 22 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகள் இருந்தாலும், அத்தனை சலுகைகளையும் ஒரே சம்பளதாரர் பயன்படுத்தி வரிச் சலுகை பெறுவது அரிது.

வீட்டுக் கடன், கல்விக் கடன் வாங்கியோர் பெருநகரங்களில் பணிபுரிந்து அதிகமாக வீட்டு வாடகை பெறுவோர்க்கு இப்போதைய நிலையில் பழைய முறை லாபகரமாக இருக்கக் கூடும்.

  • விரைவில் பணி ஓய்வு பெற உள்ளவர்கள் புதிய முறையைப் பரிசீலிக்கலாம். ஏனென்றால், பணிக்கொடைக்கான வரி விலக்கு, ஓய்வூதிய கம்யூடேசனுக்கான வரி விலக்கு, விடுப்பு சம்பளத்துக்கான வரி விலக்கு, பி.எஃப் முதிர்வுத் தொகைக்கான வரி விலக்கு, விருப்ப ஓய்வின் மீதான பணப்பலனுக்கு வரி விலக்கு, ஊழியர் டெபாசிட் திட்ட முதிர்வுத் தொகைக்கான வரி விலக்கு என அனைத்தும் புதிய வரி முறையைத் தேர்வு செய்பவர்களுக்கும் உண்டு. இவற்றுக்கு வரிச் செலுத்தத் தேவையில்லை.

புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

புதிய வரி முறையில் கிடைக்காத வரிச்சலுகைகள்!

புதிய வருமான வரி முறையில் கிடைக்காத வரிச்சலுகைகள் பல உண்டு. அவை, விடுப்பு பயணச் சலுகை (பிரிவு 10(5)), வீட்டு வாடகைப் படிக்கான வரிக்கழிவு (வருமான வரிப்பிரிவு 10(13A)).

பிரிவு 10(14) கீழ் அனுமதிக்கப்பட்ட உதவியாளர்படி, ஆய்வுப்படி, யூனிஃபார்ம்படி, சிறப்பு ஈட்டுப்படி, மலை உச்சி பணிப்படி, முதலானவை.

மைனர் வருமானத்துக்கான வரம்புக்கு உட்பட்ட வரிச்சலுகை (பிரிவு 10(32)), சிறப்புப் பொருளாதார மண்டலத் தொழில்முனைவோர் சலுகை (10 AA), ஸ்டாண்டர்டு டிடெக்சன் (பிரிவு 16 ia).

வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24 b), கேளிக்கைப் படி(பிரிவு 16 ii), தொழில் வரி(பிரிவு 16 iii).

குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்க்கான வரிச்சலுகை ரூ.15,000 (பிரிவு 57(iia) ஆகிய வரிச்சலுகைகளும் கிடைக்காது.

பழைய வரி முறையில் சுமார் 22 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகள் இருந்தாலும், அத்தனை சலுகைகளையும் சம்பளதாரர் பயன்படுத்தி வரிச் சலுகை பெறுவது அரிது!

பி.எஃப். சந்தாவுக்கு வரிச்சலுகை இல்லை

அதுமட்டுமல்ல, 80சி பிரிவின் கீழ்வரும் செலவு மற்றும் சேமிப்புக்கான ரூ.1.5 லட்சம் அதாவது, ஆயுள் காப்பீடு பிரீமியம், அன்யூட்டி சந்தா, பி.எஃப் சந்தா, சுகன்யா சம்ருதி கணக்கு சந்தா, சேமிப்புப் பத்திரம் எது ஒன்றிலுமான (2C) சந்தா, ஊழியர் தனக்கோ, மனைவி குழந்தைகளுக்கோ ஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியம், வரிச் சலுகை உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை, கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல், ஐந்தாண்டு அஞ்சலக டெபாசிட் போன்ற இனங்களுக்கும் வரிச் சலுகை கிடைக்காது.

புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மேலும், காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் அன்யூட்டி பெறுவதற்காகச் செலுத்தப்படும் சந்தா (பிரிவு 80CCC), என்.பி.எஸ் பென்ஷன் திட்டத்துக்கு ஊழியர் செலுத்தும் மாதச்சந்தா (பிரிவு 80CCD1)

அரசு ஊழியர்கள் செலுத்தும் சந்தாவுக்கு வரி இல்லை!

தமிழக அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமான சி.பி.எஸ்ஸுக்குச் செலுத்தும் சந்தா (பிரிவு 80CCD1), மருத்துவக் காப்பீடு பாலிசியில் தனக்கும், குடும்ப உறுப்பினர் மற்றும் பெற்றோருக்காகச் செலுத்தப்படும் பிரீமியம் (பிரிவு 80D), சம்பளதாரர் ஒருவர் மாற்றுத் திறனாளியைப் பராமரித்தால் அதற்காக அவரது வருமானத்தில் தரப்படும் கழிவு (பிரிவு 80DD), சம்பளதாரரே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்காகத் தரப்படும் வருமானக் கழிவு (பிரிவு 80U), நரம்பியல், சிறுநீரகக் கோளாறு போன்ற தீவிரநோய் சீகிச்சைகளுக்காகச் செய்யப்படும் செலவுக்கான வருமானக்கழிவு (பிரிவு 80DDB), சம்பளதாரர் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் அவர் கார்டியனாக உள்ள ஒரு குழந்தைக்கு வாங்கிய கல்விக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி (பிரிவு 80E), பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி போன்றவற்றுக்கு சம்பளத்தாரர் தரும் நன்கொடை (பிரிவு 80G), அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்குத் தரப்படும் நன்கொடை (பிரிவு 80GGA).

அரசியல் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை இல்லை!

அரசியல் கட்சிகளுக்குத் தரப்படும் நன்கொடை (பிரிவு 80GGC), மின் வாகனக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி (பிரிவு 80EEB), 01.04.2019 முதல் 31.03.2021 வரை பெறப்படும் வீட்டுக் கடன்களுக்குச் செலுத்தப்படும் வட்டி (பிரிவு 80EEA), சம்பளத்துடன் வீட்டு வாடகை பெறாதவர் களுக்கு அவர்கள் கொடுக்கும் வீட்டு வாடகைக்கு சம்பளக்கழிவு (பிரிவு80GG).

வங்கி, அஞ்சலகம் மற்றும் கூட்டுறவு சங்க சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்படும் 10,000 ரூபாய் வரைக்குமான வட்டி, வங்கி முதலானவற்றில் மூத்த குடிமக்கள் டெபாசிட்டுக்கான 50,000 ரூபாய் வரையான வட்டிக்கான சலுகை (பிரிவு 80TTB) ஆகியவற்றுக்கும் கிடைக்காது.

புரிந்துகொண்டால் லாபம்..!

இவற்றுள் எவையெல்லாம் நீங்கள் பெறக்கூடிய சலுகை என்பதைப் புரிந்து கொண்டால் பழைய முறையா, புதிய முறையா என்பதை நீங்கள் தீர்மானித்துவிடலாம். புதிய முறை என்றால் என்ன என்பதையே தெரிந்து கொள்ளாமல், வருமான வரியைக் குறைந்த அளவில் பிடித்தம் செய்ய உதவும்.

புதிய திட்டமோ, பழைய திட்டமோ அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், புறக்கணிப்பது நமக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். பிற்பாடு, தெரியாத்தனமாக இவ்வளவு வரி கட்டி விட்டோமே என்று நினைத்து கவலைப்படுவதைவிட இப்போதே கொஞ்சம் சிரத்தை எடுத்து, அதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டால், பல ஆயிரம் ரூபாயை நம்மால் மிச்சப்படுத்த முடியும்!

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அத்தியாயம் 6 (பகுதி 1). தமிழ்நாடு சாலியர் பட்டாரியர் சமுதாய வரலாறு


கைத்தறி நெசவு

மனிதன் முதன் முதலில் புதிய கற்காலத்தில் துணி நெசவு செய்யக் கற்றுக் கொண்டான். அன்று முதல் இன்று வரை கைத்தறி நெசவு ஒரு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. விஞ்ஞான முன்னேற்றத்தினால் நூல் நூற்றல், துணி நெய்தல் போன்றவை மில்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தாலும், பழைய கைத்தறி இன்னும் குடிசைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கைத்தறியை நம்பி பல இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கைத்தறியின் பல்வேறு பாகங்கள் கீழ்வருவனவாம்:

1.            அச்சு விழுது
2.            அடிமரம்
3.            ஓடம்
4.            ஜவுளி சுற்றும் ரோதை
5.            கால் மிதிப்பலகைகள்
6.            பாவு நூல்
7.            ஊடை நூல்

அச்சு என்பது நீளவாட்டில் வரும் பாவுநூல் தொடர்பாக ஒரே அகலத்தில், ஊடை நூலால் நெருக்கப்படும் உபகரணம் ஆகும்.  இது குறிப்பிட்ட நம்பர் நூலுக்கு ஏற்ப நெருக்கமாக அமைந்திருக்கும்.  நீளவாட்டிலுள்ள பாவு நூல் இந்த வரிசையான அச்சுக் கம்பிகளின் வெளிகளின் வழியாக ஊடுருவி வரும். அச்சு அடிமரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

விழுதுகள்:
விழுதுகள் என்பது மெல்லிய பாலிஷ் செய்யப்பட்ட கயிற்றினால் பின்னப்பட்டது. விழுதுகளின் மத்தியில் உள்ள கண்களில் நீளவாட்டிலுள்ள பாவு நூல் ஊடுருவி வந்து, அடுத்துள்ள அச்சுகளின் வெளி வழியாக ஊடைநூல் நெசவுக்குத் தயாராக வைக்க உதவும்.  இந்த விழுது அல்லது பண் என்பது நமக்கு வேண்டிய அகலம், நெருக்கம் முதலியவற்றை நெய்யப்படும் துணிகளுக்குத் தக்கவாறு அமைக்க உதவும்.

இந்த அச்சு, விழுது இரண்டும் நெசவுக்கு வேண்டிய துணியின் தரம், அல்லது நெருக்கம், துணியின் ஓரங்களில் வரும் விளிம்புகள் முதலியவற்றுக்குத் தக்கவாறு அமைக்கப்படும்.

அடிமரம்:
இந்த உபகரணம் விழுதுக்கு முன்னதாக அச்சுபொருத்தப்பட்டு முன்னும் பின்னும் அசைந்து ஊடு இழைகளை நெருக்க உதவும்.  அடிமரம் அசையும்போது அதன் முன் உள்ள விழுதுகள் வழியாக வரும் பாவுநூல் இழைகள் மேல்புறம் பாதியாகவும், கீழ்ப்புறம் பாதியாகவும் விரிந்து அதன் மத்தியில் ஊடு இழை செல்லுமளவுக்கு அமையும், அடிமரத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பெட்டி போன்ற அமைப்பில் ஊடை நூல் கண்டு பொருத்திய ஓடம் இடப்பட்டு இரண்டு பக்கமும் உள்ள பெட்டியுடன் பிணைக்கப்பட்ட ஓடக்கயிறு மூலம் கையினால் இழுக்கப்படும், அப்பொழுது ஓடம் அதனடியுள்ள உருளை மூலம் ஒரு புறம் பெட்டியிலிருந்து மறுபுறம் பெட்டிக்கு பாவு நூலின்   ஊடாகச் செல்லும். டிமரம் ஓடம் ஓடிச் செல்லுமளவுக்குத் தண்டவாளம் போல் நீளமாக இருக்கும்.  ஓடம் அச்சுக்கு முன்புறமாக உள்ள அடிமரத்தின் ஓடுபாதையில் ஒரு புறமிருந்து மறுபுறம் கைவிசை இழுப்பதால் ஓடும்.  

ப்படி மறுபுறம் ஓடம் சென்றதும், கால் மிதிபலகைகளை மறுபடியும் மிதித்து பாவு நூல் மறுபடியும் அடிப்பக்கம் உள்ள பாவு நூல்கள் மேலாகவும், மேற்புறமுள்ள பாவு நூற்கற்றை கீழ்ப்புறமாகவும் வரும். இதற்கு இடையில் ஓடம் வழியாக வந்த ஊடுநூல் அச்சு மூலம் அடிமரத்தால் நெருக்கப்படும். இப்படி ஒவ்வொரு இழையும் ஓடத்தின் மூலம் மறுபுறம் சென்றதும், அடிமரத்தின் உதவியால் அத்துடன் பொருத்தப்பட்ட அச்சு மூலம் நெருக்கப்படும்.

விழுதுகள் நான்கு அடுக்காக அச்சுஅகலத்துக்கு அதாவது துணியின் அகலத்துக்குத் தக்கவாறு எண்ணிக்கை உடையதாக இருக்கும். இந்த விழுதுகள் கோர்க்கப்பட்ட கம்பி அல்லது கம்பு கீழே மிதிபலகையுடன் கயிற்றினால் இணைக்கப்பட்டிருக்கும்.  மிதிபலகைகள் மிதிக்கப்படும்போது விழுதுகள் இரு பிரிவாக பிரிந்து பாவுநூல் முழுவதையும் அகலவாட்டில் பாதி மேல்புறமும், மறுபாதி கீழ்ப்புறமுமாக விரிந்து மத்தியில் ஓடம் ஊடுநூலுடன் ஒடிச் செல்ல வழிவகுக்கும்.

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு, கிணற்று சுவரில் இரு தூண்கள் கட்டி இந்த தூண்களை ஒரு விட்டத்தினால் சேர்த்து விட்டத்தின் மத்தியில் ஒரு இரும்பு வட்டு தொங்கவிட்டு, வட்டில் ஒரு கயிறு தொங்கவிட்டு, கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று கட்டி, கயிற்றின் மறுபுறம் மெதுவாகத் தொங்க விடும்போது, வாளியின் எடையினால், வாளி கிணற்றுக்குள் இறங்குவதும், வாளியில் நீர் நிரம்பியதும் கயிற்றின் முனையைப்பிடித்து கீழ்நோக்கி இழுப்பதால் வாளி தண்ணீருடன் மேலே வரும்.  அதுபோல மிதிபலகையை மிதிக்கும்போது விழுதுகள் இருபிரிவாக விரியும். அதற்கு ஏதுவாக விழுதுகள் கோர்க்கப்பட்ட சட்டம் மேலே வட்டுக்களில் பொருத்தப்பட்டிருக்கும். மிதி பலகைகள் மாறி மாறி மிதிக்கப்படும்பொழுது பாவு நூல் பாதி மேலும் பாதி கீழும் (ஒன்றுவிட்டு ஒரு நூல்) விரியும்.

ஊடை நூல் அங்குமிங்குமாக ஓடத்துடன் ஓடி ஒவ்வொரு முறையும் நெருக்கப்படுவதுதான் நெய்தல் என்பதாயிற்று. ஓரளவு நெய்யப்பட்டதும்நெய்த துணியைச் சுற்றும் ரோதையில் இழுத்துச் சுற்றி மேலும் நெய்வதற்கு வசதியாக இருக்கும்.

இப்படி நெய்வதற்குப் பாவு நூலும் ஊடை நூலும் முன்னதாகவே தயார் செய்யப்பட வேண்டும். இதற்கு நீளவாட்டில் வரும் பாவுநூல் வேண்டிய நீளத்திற்கு ஓர் இராட்டினத்தில் சுற்றப்பட்டுத் தயார் செய்யப்படும். குழி நூலாக இருக்கும் நூல் கண்டுகளில் சுற்றப்படும். இதற்கு இராட்டினம் ஒன்று பயன்படுத்தப்படும். கழிநூல் ஒரு கூடை போன்ற சுற்றும் இராட்டினத்தில் பொருத்தப்பட்டு நூல் இழை இராட்டையிலுள்ள கதிரில் பொருத்தப்பட்ட நூல் கண்டில் சுற்றப்படும். கண்டுகளில் நூல் சுற்றப்பட்டதும், அவைகள் பாவு ஓடுவதற்குறிய கதிர்களில் பொருத்தப்படும். இந்தக் கண்டுகளிலிருந்து நூலிழைகள் சீராக ஒரு கருவியின் மூலம் கோர்க்கப்பட்டு அதன் வழியாகப் பெரிய இராட்டினத்தில் வேண்டிய நீளத்துக்குச் சுற்றப்படும்.  பாவு நூல் சிக்காதபடி ஒவ்வொரு ஒண்ணரை முழம் அளவில் பின்னல் முறையில் இராட்டினத்தில் சேர்க்கப்படும். பிறகு இந்த பாவு நூல் கஞ்சிப் பசையில் தோய்க்கப் பெற்று தெருவில் நீளமாக விரிக்கப்பட்டு பல தொழிலாளர்களால் ஒரே சமயத்தில் நேர்த்தி செய்யப்படும்.  இதற்கு பாவு தோய்த்தல் என்று பெயர். புல் கட்டு என்ற கருவியால் நூல் நேர்த்தி செய்யப்பட்டு சிக்கல் எதுவுமின்றிச் சுத்தமாக கஞ்சிப் பசையுடன் திறம்படுத்தப்படும். தலைமுடியைச் சீப்பு கொண்டு நேர்த்தி செய்வது போன்றதே இந்தப் புல்கட்டு மூலம் நூலிழைகளை நேர்த்தி செய்வது. கஞ்சி போடும்போது பாவு நூலில் ஒண்ணரை முழத்துக்குப் பின்னல் முறையில் உள்ள வெளியில் மெல்லிய கம்புகள் பொருத்தி தெரு நீளம் பாவு கட்டப்பட்டு நேர்த்தி செய்யப்படும். பின் ரோதையில் சுற்றப்பட்டு தறி நெய்யும் இடத்திற்கு கொண்டு வரப்படும். பாவு நூலில் உள்ள ஒவ்வொரு இழையும் தறியில் விழுதுகளுக்கு முன் வந்து நிற்கும். பழைய பாவு நூலுடன் கைகளால் நிரடப்படும். இப்பொழுது பாவு நூல் நெய்வதற்குத் தயாராகிறது.

ஊடை நூலும் நல்ல முறையில் கஞ்சியிடப்பட்டுச் சிறிய நூல் கண்டுகளாகச் சுற்றப்படும்.  நூல் கண்டுகள் ஓடம்என்ற அடியில் ரோதைகள் உள்ள கருவியில் பொருத்தப்பட்டு நெய்வதற்குத் தயாராகும்.

சிறிய நூல் கண்டுகள் பொருத்தப்பட்ட ஓடம் கைவிசையினால் இழுக்கப்படுவதால் அடியில் சிறு உருளையுடன் இருக்கும். கைவிசை இழுக்கப்படும்பொழுது ஓடம் அடியிலுள்ள உருளை மூலம் இலகுவாக அடிமரத்தின் மறுபக்கம் ஓடி வரும்.  மிகவும் மெல்லிய பட்டு நூலால் நெசவு செய்யப்படும் கைத்தறியில் இந்த ஓடம் மூங்கில் குழல்களால் செய்யப்பட்டிருக்கும்.  ஓடத்தின் இருபுறமும் கூர்மையாகக் குப்பி பொருத்தப்பட்டிருக்கும்.  அடியில் உருளை இருக்காது. இந்த ஓடம் அடிமரத்தின் பாதையில் கையினால் தள்ளப்பட்டு மறுபுறம் ஓடிவரும்.  குழிவெட்டி அதனுள் இறங்கி நெய்யும் தறியை குழித்தறியென்றும், மேசையில் உட்கார்ந்து நெய்யும் தறியை மேசைத் தறியென்றும் கூறப்படும். இதையே சில இடங்களில் சப்பரத் தறி என்றும் சொல்வதுண்டு.

****



திங்கள், 10 பிப்ரவரி, 2020

அத்தியாயம் 5 (பகுதி 2). தமிழ்நாடு சாலியர் பட்டாரியர் சமுதாய வரலாறு

ஆடை (தொடர்ச்சி)

சிந்துவெளி நாகரீகம்

இந்தியாவில் ஆதிவாசிகள் திராவிடர்கள் என்பதும் ;அவர்களுக்கேற்ப இப்பரந்த நாட்டில் வாழ்ந்த நாகர்என்ற பூர்வகுடியினரும் கைத்தறி நெசவில் தேர்ந்து விளங்கினர் என்பதும், சிந்து சமவெளி நாகரீகத்தில் காணக் கிடைக்கும் பருத்தி இழைகளே, இந்தியாவின் ஆடை பற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்றாகும்.

கி.மு. 2303 அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிகப் பொருட்களில் பருத்தி ஆடையும் ஒன்று என்று சுமேரியன் கையெழுத்துப் படிகள் கூறுகின்றன.  மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர் திருகுகள் இம்மக்கள் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததை தெரிவிக்கின்றன.

பிற நாட்டு அறிஞர் எண்ணங்களும், எழுத்தும், தொல்பொரும் ஆய்வுகளும் பருத்தி இந்தியாவிற்குறியது என்பதை உறுதிபடுத்துகின்றன.  உலகில் மற்ற நாடுகள் நாகரீகம் அடையும் முன்னரே இந்தியர் பருத்தியை விளைவித்து நூல் நூற்று ஆடை நெய்யக் கற்றுக் கொண்டனர் என்பதை பெரிப்புனுஸ்என்பவரின் கடல்வழிப் பயணங்கள் குறிப்பிடுகின்றன.  பருத்தியின் பயனை சீனர்கள் நீண்டகாலம் உணராமல் வெறும் அழகுச் செடிகளாகவே பயன்படுத்தி வந்தனராம்.

சுமார் 2150 ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டின் வணிகம் அளவில் விரிந்தும் வருமானத்தில் மிகுந்தும் காணப்பட்டது. உரோமப் பேரரசின் செல்வமெல்லாம் ஆண்டொன்றிற்கு 650 மில்லியன் செஸ்டர்ஸ் காசுகளாக (நூறு மில்லியன் காசுகள்) இந்தியாவிற்குச் செல்கிறது என்று உரோமாபுரியின் எழுத்தாளர் பிளினி XII எழுதுகிறார். பிளினியின் காலம் கி.பி. 77.  பாண்டிச்சேரிக்கு அண்மையிலுள்ள அரிக்கமேட்டில் 1945 ல் கண்டுபிடிக்கப்பட்ட யவனர் குடியிருப்பு மலேசியா போன்ற நாடுகளுக்குரிய நுழைவுத் துறைமுகமாக உரோமர்களுக்கு அந்நாளில் பயன்பட்டு வந்ததாம். உரோமர்கள் சோழர்களின் உறையூர் ஆடை போன்ற பண்டங்களை வாங்கி, கிழக்கத்திய நாடுகளின் சந்தைகளுக்கும் உரோம நகரத்தின் சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தியதாகவும் அரிக்மேட்டில் உரோமானிய ஆலை ஒன்று இருந்ததாகவும், அந்த ஆலையில் உரோமானியர்களுக்குப் பிடித்தமான முறையில் ஆடைகள் பதப்படுத்தப்பட்டு, உரோமாபுரியின் உற்பத்தி செயல்முறையின் துணை பெற்ற பின்புதான் உறையூர்த் துணி ஏற்றுமதி செய்யப்பட்டது.  அரிக்கமேடு, உறையூர் அகல்வாராய்ச்சிகள் மூலம் நெசவுத் தொழிலைச் சார்ந்த வண்ணமூட்டலுக்கு சாயம் போடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சாயத் தொட்டிகள் காணப்பட்டதாம்.  உறையூர்ச் சேலைகள் மிகவும் மெல்லிய நூலால் நெய்யப் பட்டிருக்கும். ஒரு புடவையை ஒரு தேங்காய் மூடியில் வைத்து அடக்கிவிடலாமாம்.

உறையூர் ஆடைகளை ரோம அரசர்களும் பெண்களும் விரும்பி வாங்கினர் என்று வரலாறு கூறுகிறது. ஆடைகள் சிலந்தி வலையைப் போன்று மிகவும் மெல்லியதாக இருந்ததாகவும், ‘சென்னேராஎன்ற மேல்நாட்டறிஞர் தாம் வரைந்த வழிச்செலவு வரலாற்றில் எழுபத்தெட்டு முழ நீளமுடையவையாயிருந்தும் உள்ளங்கைகளில் அடக்கி விடும்.  அத்துணை மெல்லிய விலையேறிய ஆடைகள் நெய்வதற்கும், அதற்குறிய பருத்தியைச் செப்பம் செய்வதற்கும் தமிழர்கள் கையாண்ட முறையைப்பற்றிப் பரக்கக் கூறியுள்ளார். உறையூர் பருத்தி மற்றும் பட்டு நெசவுக்குப் பெயர் பெற்று விளங்கியதால்தான் நெடுங்கிள்ளியிடமிருந்து நலங்கிள்ளி உறையூரின் உரிமையைப் பறித்ததோடன்றி உறையூரப் போன்ற நெசவுக் கேந்திரமான பாண்டியரின் மதுரையையும் நலங்கிள்ளி கைப்பற்றினான் என்று சோழர் வரலாறு கூறுகிறது.

உறையூர் கைத்தறி நெசவுத் தொழில் பற்றி பெரிபிளுஸ்என்ற நூலில் சிறப்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.  ஊறையூரில் நெய்யப்பட்ட ஆடைகள் நல்ல பாம்பு உரிக்கும் மேல்சட்டை போலவும். மேக மண்டலத்தில் காணப்படும் மேகக் கூட்டங்களின் சேர்க்கை போலவும் உள்ளது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.  மேலும் இவ்வூரின்கண் நிகழ்த்திய அகழ்வாய்வில் சுட்ட செங்கல்களாலான தொட்டிகள் கிடைக்கப் பெற்றன.  அவை சாயம் தோய்க்கும் தொட்டிகள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.  இத்தொல் பொருட்கள் கி.பி. 2 முதல் 5 நூற்றாண்டுகளானது எனக் கால வரையறை செய்துள்ளனர். இன்றும் இவ்வூர் கைத்தறி நெசவுக்கு பிரபலமானது. 100 x 100 நூலில் உறையூரில் தயாராகும் புடவைகளுக்கு அங்காடிகளில் தனிச்சிறப்பு உண்டு.
                (உறையூர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி)

பேராசிரியர் எஸ். வைத்தியலிங்கம் அவர்கள் எழுதிய “  Fine Arts and Crafts “ என்ற நூலில் தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே நெசவுக் கலையைப் படிப்படியாக வளர்த்து வந்ததாகவும், மிகவும் உயர்ரக துணிகளை  நெய்யும் திறமையைச் சங்க காலத்திலேயே பெற்று இருந்ததாகவும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் பஞ்சுப் பட்டாடைகளை உற்பத்தி செய்து வந்ததாகவும், எரிதிரிந்தென்ன பொன் புனை உடுக்கைகள் (பொன்னாடைகள்) நெய்வது முற்காலத் தமிழர்களுக்குப் புதுமையானதல்லவென்றும் தெரிவிக்கிறார்.
(பரிபாடல் 1:10)

இசைக் கலைஞர்களும் ஆடற் கலைஞர்களும் தங்கள் திறமையையும் கலை முதிர்ச்சியையும் காட்டுவதற்காகத் தங்கள் கந்தலாடைகளைக் களைந்து விட்டு மிகவும் விலை உயர்ந்த ஆகைளை அணிந்து வந்தனர் என்று புறநானூறு கூறுகிறது.

                “தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை
                முதுநீர்ப் பாசியன்னவுடை களைந்து
                திருமலரன்ன புதுமடிக் கொளீஇ”                                                       (புறம் 390:13.15)

மார்க்கோ போலோஎன்ற வெளிநாட்டுப் பயணி தன்னுடைய நூலில் தென்னகத்தில் மிக உயர்ந்த, மிகவும் மென்மையான பருத்தி நூல் துணிகள் நெய்யப்பட்டதாகவும், அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாகவும், அந்தத் துணிகள் சிலந்தி வலையைப் போலவே இருந்ததாகவும், அந்தத் துணியால் ஆன ஆடைகளை அணிந்து மகிழாத அரசனோ அரசியோ இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.  மார்க்கோ போலோ இங்கு குறிப்பிட்ட பகுதிகள் குமரி முனையிருந்து நெல்லூர் வரையிலான பாண்டி நாடாகும். இதிலிருந்து பாண்டி நாடும் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியது என்பது  தெளிவாகும்.

தமிழ்நாட்டு வணிகர்கள் கி.மு. 3000 ல் பாபிலோனுக்கும், கி.மு. 2400 முதல் எகிப்துக்கும், மிளகு, தேக்கு, புலித்தோல், முத்து, பவழம், வைரம், பருத்தி ஆடைகள் ஆகிய சரக்குகளைக் கிழக்கு ஆப்பிரிக்கா வழியாகத் தமிரின் நாவாய்கள் மூலமாக அனுப்பியதாக பிளினி, தாலமி, பெரிப்புளுஸ் போன்ற மேநாட்டு ஆசிரியர்களின் குறிப்புகளில் இருந்தும் சங்க நூற்சான்றுகளாலும் அறிகிறோம்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியர்கள் சீனர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும், உரோமாபுரி வணிகர்கள் இந்தியப் பட்டாடைகளின் நேர்த்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. சந்திரகுப்த மௌரியரின் அமைச்சர், சாணக்கியன் தான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் பாண்டி நாட்டு முத்துக்களையும் பஞ்சாடைகளையும் போற்றித் தென்னாட்டுடன் வணிகம் செய்தல் சிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கி.மு. 2500 ல் ஆரியர்கள் புல்வெளிகளை நோக்கி மிகவும் செழிப்பான பூமியன சிந்துநதி தீரத்துக்குள் புகுந்தனர். ஏற்கனவே சிந்து சமவெளியில் மிகவும் உயர்ந்த நகரீகத்தினை உருவாக்கி இருந்த திராவிடர்கள் தெற்கே துரத்தப்பட்டனர். ஆரியர்கள் பிறகு சிந்து கங்கைச் சமவெளியில் ஆரிய வர்த்தம்என்ற பெயரில் ஆட்சி செலுத்தினர்.  பேராசிரியர் க.ந. திருநாவுக்கரசு எம்.ஏ. தமிழ், எம்.ஏ. வரலாறு, எம்.லிட். அவர்கள் எழுதிய சிந்துவெளிதரும் ஒளியில் உடைஎன்ற தலைப்பில் மொகஞ்சதாரோவில் உள்ள வீடுகள் பலவற்றுள் நெசவுத் தொழில் நடந்து வந்தது என்பதற்குச் சான்றுகளாக நூற்கும் கதிர்கள் பல கிடைத்துள்ளன. ஆவை பளிங்காலும், சங்கினாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டவை.      

பஞ்சும் கம்பளி மயிரும் கொண்டு நெசவுத் தொழில் நடத்தினர். பஞ்கின் துணுக்குகள் பல வெள்ளியால் செய்யப்பட்ட மலர்க் குவளைக்கு அருகில் கிடைத்துள்ளன.  அவற்றை நுட்பமாக ஆராய்ந்து பார்த்த ஆட்சியாளர்கள் இன்றைய இந்தியப் பஞ்சைப் போன்றே அப்பஞ்சும் இருப்பதாகக் கருதுகின்றனர்.  பஞ்சு தக்காணத்திலிருந்து சிந்துவெளிக்குச் சென்றிருக்க வேண்டும்.  அப்பஞ்சைத்தான் பாபிலோனியர் சிந்துஎன்றும், கிரேக்கர் சின்டன்என்றும் பெயரிட்டு வழங்கினர்.  சிந்துவெளியில் கிடைத்துள்ள ஓவியங்கள் சிலைகள் ஆகியவற்றிலிருந்து நல்ல சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகளை நெய்தனர் எனத் தெரிகிறது.

அக்காலத்தில் ஆடைகளில் நீண்ட போர்வை அல்லது சால்லை ஓர் உடையாக இருந்தது.  இதனை அந்நகரங்களில் கண்டிடுக்கப்பட்ட இரண்டு சிலைகளின் உடைகளிலிருந்து அறியலாம்.  எளியவர் பருத்தி ஆடைகளையும், செல்வந்தர் உயர்ந்த பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பேர்வைகளையும் சால்வைகளாக அணிந்திருந்தனர்.

மொகஞ்சதாரோவில் பல்வகைப் பொத்தான்கள் கிடைத்துள்ளன.  இதனால் அந்நகர மக்கள் சட்டைகளையும் அணிந்திருந்தனர் என்பது புலனாகிறது.  பெண்கள் பாவாடைகள் அணிந்திருந்தனர்.  செல்வர் வீட்டு மங்கையர் மெல்லிய மேலாடையையும் அணிந்திருந்தனர் என்பதை முத்திரைகளினால் அறிகிறோம்.

மேலைநாடுகளில் பண்டைக் காலத்தில் பருத்தி ஆடை அணிந்திருந்ததாக தெரியவில்லை.  அந்நாடுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து பஞ்சை அறிந்தன.  அதனால்தான் பாபிலோனியர் பஞ்சை சிந்துஎன்றும், கிரேக்கர்கள் சின்டன்என்றும் பெயரிட்டு வழங்கினர். சிந்துவெளி மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சினை நூற்று, ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர் என்பது வியத்தற்குறிய செய்தியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூற்றை வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆர்.ஆர். திவாகரும், எஸ். இராமகிருஷ்ணன் என்பாரும் தாங்கள் எழுதிய கி.மு. 3250 முதல் 2750 வரையிலான 500 ஆண்டு காலத்திற்கான ‘Hindu Civilisation’ என்ற நூலில் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஜியோனைன் அபோயர்தான் எழுதிய ‘Daily Life in Ancient India’ என்ற நூலில் கி.மு. 200 முதல் கி.பி. 700 வரையிலான காலத்தில் பட்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் (பட்டுப்பூச்சி பற்றிய ரகசியம் சீனாலில் நீண்ட காலம் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டது) இந்தியர்கள் அந்தப் பட்டு நூலை விலை உயர்ந்த மெல்லிய ஆடைகளாக உருவாக்கி தாங்கள் அணிந்தது போக எஞ்கியதை பெருமளவிற்கு ஏற்றுமதி செய்தனர்.  இந்தியர்கள் பருத்தியைத் தாங்களே பயிரிட்டு வளர்த்து அந்தப் பருத்தியிலிருந்து மிகவும் மெல்லிய மஸ்லீன் ஆடைகளை நெய்து அழகிய வண்ணங்களில் சாயம் தோய்த்தனர்.  இந்தத் தொழிலில் அவர்கள் சிறந்து விளங்கியதோடு, இந்தியாவில் - குறிப்பாக குஜராத் கிழக்கு வங்காளம் (டாக்கா) தென்னகம் முழுவதும் குறிப்பாக, திருச்சிராப்பள்ளி, தஞ்சை மசூலிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் செல்வச் செழிப்பையும் உருவாக்கினர். இத்துடன் மெத்தைகள் தலையணைகளுக்குத் தேவையான பண்படுத்தப்பட்ட பஞ்சும் அந்நாளில் மிகவும் முக்கியமான ஜவுளிச் சந்தையாகத் திகழ்ந்த எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்;டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டு நூலின் பூர்வீகம்:

உலகிலேயே முதன் முதலாகப் பட்டு உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில்தான். பட்டுத் துணிகள் என்றால் சீனப்பட்டுகளையே குறிப்பதாகவும், பதனிடப்படாத பட்டு (Raw Silk) அயல்நாடுகளு;குக் கால்நடையாகவே கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பபட்டதாகவும் பெரிப்புனாஸ்கூறுகிறது.

ஜப்பானியர் இரண்டு சீன மகளிரைக் கடத்திச் சென்று இக்கலையைக் கற்றதாகவும் இந்தியனை மணந்த சீனப் பெண் தன் கூந்தலில் பட்டுப் பூச்சியைக் கடத்தியதன் மூலம் இந்தியாவில் பட்டு உற்பத்திக் கலையைப் பரப்பிதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாட்டில் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் திருக்காம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம். பட்டின் தோற்றம் கி.மு. 2640 என்று கருதுகிறார்கள்.

சீனாவிலிருந்து பட்டு முதலில் அஸ்ஸாம், காஷ்மீரம், வங்காளம் போன்ற பகுதிகளுக்குப் பரவியது.  பட்டுப்புழுக்கள் வடிவத்தில் கர்நாடகத்திலும் பரவியது.  கர்நாடகத் தட்பவெப்பநிலை, மண் இவற்றின் தன்மை பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு மிக உகந்ததாக உள்ளது. இதனால் பட்டு என்றால் கர்நாடகம் நமக்கு பட்டென்று ஞாபகத்துக்கு வருகிறது.
(சாலியர் குரல் 9/88)

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 985 ல் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறினார்.  ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவுகோல் அந்நாட்டு மக்கள் பயன்படுத்திய ஆடையணிகளாகும்.  இராஜராஜ சோழன் காலத்தில் தமிழக மக்கள் பருத்தி நூலாலும், பட்டாலும் நெய்யப்பட்ட நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தனர். அக்காலத்தில் பாலாவி போன்ற நுண்துகில் பொங்கும் நுரையைப் போன்ற கலிங்கம், காவியூட்டிய பூந்துகில், முயல் ரத்தம் போன்ற செவ்வண்ணப் பட்டுகள், பசிய இலை வேலைப்பாடுடைய பட்டுகள், மெல்லிய ஆடைகள் ஆகியவற்றை மக்கள் அணிந்து மகிழ்ந்தனர். இன்றும் தஞ்சைப் பெருங்கோவிலில் கோபுரத்தின் உட்புறம் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களில் மன்னர் இராஜராஜ சோழன் தன் மனைவிமார்களுடன் சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போன்று ஒரு வண்ண ஓவியம் உள்ளது. ஆந்த ஓவியத்தில் மன்னனும் அவர் மனைவியரும் மெல்லிய பட்டாடை உடுத்தியிருப்பது போலவும், தற்கால நாகரீக மங்கையர் உடுத்தி வரும் கால்சட்டை, மேலாடை (பைஜாமா, சுடிதார்) போன்ற உடைகளுடனும் தோளில் தொங்கு பையுமாகக் காட்சி தருகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட இந்த ஓவியங்கள் இரசாயன முறையில் கழுவி நேர்த்தி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கலிங்கமும், கலிங்கத்துப் பரணியும்:

ஆடையைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொற்கள் பல.  அவற்றுள் கலிங்கம்’, ‘காழகம்’, ‘அறுவை’, ‘துகில்’, என்பவை சில. கலிங்கத்தில் நெய்யப்பட்ட ஆடை கலிங்கமாகும். கலிங்கத்தைப் பற்றிய ஒரு சுவையான செய்தி பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழர் வாழ்வுஎன்ற நூலில் மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் இரட்டைப் புலவர்கள் நீராடிக் கொண்டிருந்தனராம். அப்போது ஒரு புலவரின் ஆடை மடியிலிருந்து நழுவி நீரில் மூழ்க, புலவர் ஐயோ, கலிங்கம் போகிறதேஎன்று கூவ, மற்றவர் நகைச்சுவையாக,
                “இக்கலிங்கம் போனலென் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை
என்று பாடினார்.

பண்டைய இந்தியாவில்  56 நாடுகள் இருந்தனவென்றும் அவற்றில் கலிங்கமும் ஒன்று என்றும் படித்திருக்கிறோம்.  அசோக மன்னன் கலிங்கத்தை அடிமைப்படுத்தினான். பின்னர் சோழர்களும் கலிங்கத்தை வென்றனர். கலிங்க நாடு சோழர்களுக்குத் திறை செலுத்தி வந்ததாகவும், குலோத்துங்க சோழன் காலத்தில் திறை செலுத்தாமையால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்று ஒரே நேரத்தில் 1000 யானைகளைக் கொன்று குவித்ததால், அக்கால மரபிற்கேற்ப சயங்கொண்டார்என்ற புலவர் குலோத்துங்க சோழனைக் காவியத் தலைவனாக உருவாக்கி கலிங்கத்துப் பரணியைப் பாடினாராம்.
ஆற்றங்கரை நாகரீகம் என்ற நூலில் திரு. மா. இராசமாணிக்கம் அவர்கள் மதுரையில் பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஒரு வகை எலி மயிராலும் கண்கவர் ஆடைகள் நெய்யபட்டு வந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது என்பார்.  பாண்டியர் வரலாறுஎன்ற நூலில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்  பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல் சங்கத்து வலையல் செய்தல் நூல் நூற்றல் ஆடை நெய்தல் ஆகிய தொழில்கள் நடைபெற்று வந்தன. நுண்ணிய பருத்தி நூலாலும் எலி மயிராலும் பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன என்பார்.

                “நூலினது மயிரினும் நுழை நூற்பாட்டினும்
                 பால்வகை தெரியாப் பண்ணூறருக்கத்து
  நறுமண்டி செறிந்த அறுவை விதியும்
(சிலம்பு ஊர்காண்காதை வரி 205.207)

              “பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
       செஞ்சொற் புலவனே சேயிழையா எஞ்சாத
       கையேவா யாகக் கதிரே மதியாக
       மையிலா நூண் முடியுமாறு

என நன்னூல் இலக்கணம் எழுதிய பவனந்தி முனிவர் சிறந்த செய்யுள் எழுதுவதையும் நெசசுத் தொழிலையும் இணைத்துக் காட்டுகிறார். துகில் என்பது மாதர் அணியும் மெல்லிய ஆடையாகும்.  மகாபாரதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில்உரிந்தான் எனக் கேள்விப்படுகிறோம். கடற்கரைக்குத் தன்னுடைய காதலனான கோவலனுடன் சென்ற மாதவி நிறங்கிளர்ப் பூந்துகில் நீர்மையின் உடுத்தி இருந்தாள்என்று சிலம்பு கூறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் துயிலிஎன்ற ஊர் உண்டு.  அவ்வூரில் நெய்யப்படும் மெல்லிய ஆடை துயில்என்று வழங்கப்பட்டது.  நேர்த்தியான துகில் நெய்யப்பட்டதால் துகிலிஎன்றழைக்கப்பட்டு துகிலி துகில்என்று மருவியது என்பர். தறியினின்று துண்டிக்கப்பட்டது துண்டு, அறுக்கப்பட்டது அறுவை, குறைக்கப்பட்டது கூறை என்றாயிற்று.

கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல் பேடகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, சுவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி என்று 36 வகை ஆடைகளை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.  துகில், பூந்துகில் சீரை, சீலை, மேகலை, கூறை, சிற்றாடை, வட்டுடை, கலிங்கம், காழகம், தூசு, படம், படாம், துண்டு, தறி புடவை ஆகியனவும் துணி வகையைக் குறிப்பிடுவன என்று பா. இறையரசன் என்பார் தன் தமிழர் நாகரீக வரலாறுஎன்ற நூலில் கூறுகிறார்.

கவியரசு கண்ணதாசன் தன் தென்றல்பத்திரிகையில் கீழ்க்கண்ட வெண்பா பாடலை வெளியிட்டுள்ளார்.

                “பொன்னும் புகழ்முத்தும் பூந்துகிலும் நாவாயும்
                முன்னு திகழ் காதல் வீரமென
                தென்னகத்தே, அன்றிழந்ததேதும், வராது, நீ மட்டும்
                தென்றலே, ஏன் வந்தாய் செப்பு?”

ஆடைகளும், பெயர் காரணங்களும்:

1.            வேட்டி வெட்டப்படுவதால் வேட்டிஎன்றானது. பகுதியாக வெட்டிப் பயன்படுத்துவதால் வெட்டுதலை உடையது என்னும் பொருளில்  வேட்டிஎனப்பட்டது.

2.            துண்டு: துண்டு செய்யப்படுவதால் துண்டுஎனப்பட்டது.

3.            சேலை: சீலை என்பதே சேலை என்று வந்தது. திரைச்சீலைஎன்றுதான் இன்றும் வழங்கப்படுகிறது.

துண்டு, வேட்டி- இவற்றைவிட நீளமாக இருப்பதால் சீலை எனப்பட்டது. சீஎனும் தமிழ் வேர்ச்சொல்லுக்கு நீளமானது என்று பொருளாகும்.

4.            சட்டை: உடலைப் போர்த்துவதால் சட்டை எனப்பட்டது. குழிவாக ஊற்றும் திரவத்தைப் போற்றுவதால் கரண்டியைச் சட்டுவம் என்பர். இதைப் போலவே உடலைப் போர்த்தியபடி பேணியபடி அமைவதால், ‘சட்என்பதன் அடியாக சட்டை என்ற சொல் பிறந்தது. பாம்பின் மீது போர்த்தியதுபோல் இருப்பதால் பாம்புச் சட்டை என்று பெயர் வந்தது.

5.            ஆடை: உடலில் அணியும் துணி வகைக்கு ஆடை என்று பெயர்.  அடுக்கியிருப்பதால் ஆடை’. உடலோடு ஒட்டி அடுக்கி இருப்பதால் ஆடை என்ற பெயர் வந்தது. பால்மீது ஒட்டிப் பரவியபடி இருப்பதால் பாலேட்டைப் பாலாடைஎன்கிறோம்.

6.            கைலி: கையொலியில்’                என்ற இஸ்லாமியச் சொல்லிலிருந்து கைலிஎன்ற சொல் வந்தது. கைலி என்பது தமிழ்ச் சொல் அல்ல. டாக்டர் எச். சேளந்திரபாண்டியன் எம்.ஏ.,பி.எட், காப்பாட்சியர் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. (சாலியர் குரல், ஜூலை, 1994).

*****