Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சாலியர் குடும்ப விழா – 23.12.2018 – சாலியர் மகாஜன சங்கம் (தமிழ்நாடு), சென்னைக் கிளையின் ஆண்டு விழா



சாலியர் மகாஜன சங்கம் (தமிழ்நாடு) சென்னை கிளையின் ஆண்டு விழா பொதுக்குழு. ஆண்டு விழா, மலர் வெளியீட்டு விழா, பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழாவாக வரும் ஞாயிற்றுக் கிழமை 23.12.2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, சென்னை-17, தியாகராய நகர், அகஸ்தியர் கோவில் அருகில், (வெங்கட்நாராயணா ரோடு, நடேசன் பூங்கா பின்புறம் மற்றும் கவிஞர் கண்ணதாசன் இல்லம் அருகில்),சுந்தரம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. நம் சாலியர் சமுதாய குடும்ப விழாவாக நடைபெறும் ஐம்பெரும் விழாவிற்கு தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

விழாவில்
இளைய வள்ளல் திரு. . ஸ்ரீதரன் அவர்கள், வேந்தர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
டாக்டர் ஜி. சுவாமிநாதன் அவர்கள், தலைவர், சாலியர் மகாஜன சங்கம்
திரு. . இரமேஷ் அவர்கள், நிர்வாக இயக்குநர்போத்தீஸ் குழுமம்,.
திரு. கே. அழகுராஜ் அவர்கள், பொருளாளர்.,சாலியர் மகாஜன சங்கம்

மற்றும் தொழிலதிபர்களும், சமுதாய தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

காலை 9 மணியளவில் இலவச மருத்துவ முகாம், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் பொதுக்குழுக் கூட்டமும். அதன் தொடர்ச்சியாக கல்வி விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

தொடர்ந்து சான்றோர்களுக்கும், புரவலர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது
   
சாலியர் மகாஜன சங்கம் (தமிழ்நாடு) சென்னைக் கிளையின் சார்பாக தலைவர் டாக்டர் . விநாயக மூர்த்தி, செயலர் திரு. எஸ். கிருஷ்ணசாமி (வழக்கறிஞர்), பொருளாளர் திரு. எஸ். நாராயணன் (அதிபர் எஸ்.என். பில்டர்ஸ்) மற்றும் கிளை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களை வரவேற்கிறார்கள்.

தங்களின்  பார்வைக்காக அழைப்பிதழ் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.








செவ்வாய், 11 டிசம்பர், 2018

விற்பனையாகாத வீடுகள் காலியாக இருந்தாலும் அதற்கு வாடகை கணக்கிட்டு வருமான வரி கட்ட வேண்டும்

நீங்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுபவராக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான். 

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச்சட்டம் பிரிவு 23(5) ன்படி நீங்கள் விற்பனைக்காக கட்டி முடித்த வீடுகள் விற்பனை செய்யாத நிலையில், அதற்கு வாடகை வருமானம் கணக்கிட்டு வரி செலுத்தும் வகையில் வருமான வரிச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் தேங்கியிருப்பதால் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அனைவரும் தங்களது முதலீடுகளை திரும்ப எடுக்க முடியாமல் துயரத்தில் உள்ள இந்நிலையில் மத்திய அரசு செய்துள்ள இந்த மாற்றத்தின் மூலம் கட்டுமானத் தொழில் மேலும் நசிவடையும் சூழல் உருவாகியுள்ளது. 


கடந்த 2017ம் ஆண்டின் மத்திய அரசு பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வருமான வரிச்சட்டம் பிரிவு 23(5) க்குப்பின் வீட்டு சொத்திலிருந்து வருமானம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளும் வகையில் வருமான வரிச்சட்டம் பிரிவு 22 மற்றும் 23 தங்களின் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

Income from house property.
22. The annual value of property consisting of any buildings or lands appurtenant thereto of which the assessee is the owner, other than such portions of such property as he may occupy for the purposes of any business or profession carried on by him the profits of which are chargeable to income-tax, shall be chargeable to income-tax under the head "Income from house property".

Annual value how determined.
23. (1) For the purposes of section 22, the annual value of any property shall be deemed to be—
(a) the sum for which the property might reasonably be expected to let from year to year; or
(b) where the property or any part of the property is let and the actual rent received or receivable by the owner in respect thereof is in excess of the sum referred to in clause (a), the amount so received or receivable; or
(c) where the property or any part of the property is let and was vacant during the whole or any part of the previous year and owing to such vacancy the actual rent received or receivable by the owner in respect thereof is less than the sum referred to in clause (a), the amount so received or receivable :
Provided that the taxes levied by any local authority in respect of the property shall be deducted (irrespective of the previous year in which the liability to pay such taxes was incurred by the owner according to the method of accounting regularly employed by him) in determining the annual value of the property of that previous year in which such taxes are actually paid by him.
Explanation.—For the purposes of clause (b) or clause (c) of this sub-section, the amount of actual rent received or receivable by the owner shall not include, subject to such rules25 as may be made in this behalf, the amount of rent which the owner cannot realise.
(2) Where the property consists of a house or part of a house which—
(a) is in the occupation of the owner for the purposes of his own residence; or
(b) cannot actually be occupied by the owner by reason of the fact that owing to his employment, business or profession carried on at any other place, he has to reside at that other place in a building not belonging to him,
the annual value of such house or part of the house shall be taken to be nil.
(3) The provisions of sub-section (2) shall not apply if—
(a) the house or part of the house is actually let during the whole or any part of the previous year; or
(b) any other benefit therefrom is derived by the owner.
(4) Where the property referred to in sub-section (2) consists of more than one house—
(a) the provisions of that sub-section shall apply only in respect of one of such houses, which the assessee may, at his option, specify in this behalf;
(b) the annual value of the house or houses, other than the house in respect of which the assessee has exercised an option under clause (a), shall be determined under sub-section (1) as if such house or houses had been let.
26[(5) Where the property consisting of any building or land appurtenant thereto is held as stock-in-trade and the property or any part of the property is not let during the whole or any part of the previous year, the annual value of such property or part of the property, for the period up to one year from the end of the financial year in which the certificate of completion of construction of the property is obtained from the competent authority, shall be taken to be nil.]

விற்பனைக்காக கட்டி முடிக்கப்பட்டு இருப்பில் உள்ள வீடுகள், அவை கட்டி முடிக்கப்பட்டதற்கான பணி நிறைவுச் சான்றிதழ் பெற்ற நாளின் நிதி ஆண்டு முடிவிற்குப் பின் ஓராண்டு வரை வருமானமாக கணக்கிட வேண்டியதில்லை. ஓராண்டு முடிவிற்குப் பின்னர் விற்காமல் அல்லது வாடகைக்கு விடப்படாமல் காலியாக இருந்தாலும், வாடகை வருமானம் கணக்கிடப்பட வேண்டும். 

மேலும் கட்டிடம் பணிநிறைவுச் சான்று பெறும் முன்னதாகவோ, பெற்றதற்குப் பின்னரோ உண்மையில் வாடகைக்கு விடப்பட்டிருந்தால், வாடகைக்கு விடப்பட்ட காலத்திற்கு வாடகை வருமானத்தை கணக்கிட்டு வரி செலுத்தப்பட வேண்டும், மேலே குறிப்பிட்ட விதிவிலக்கு இதற்கு பொருந்தாது.

விற்பனையாகாமல் காலியாக உள்ள வீடுகள் அல்லது வணிக வளாகங்களுக்கு வாடகை வருமானம் கணக்கிடப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து சில கட்டுமான நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.

கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவர்களுக்கு இந்த சட்டப்பிரிவு பொருந்துமா? என்பதில் எவ்வித தெளிவும் இல்லாத நிலையே தற்போது வரை நீடிக்கிறது.  விற்பனைக்காக கட்டப்படும் கட்டிடங்கள் வாடகை வருமானத்திற்காக இருப்பு வைத்திருப்பதாக கருதப்படுமா? என பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. இது சம்பந்தமாக யாருக்கும் தெளிவான முடிவு தெரியாத நிலையே தொடர்கிறது. 

இந்த பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக அன்சால் ஹவுஸிங் கட்டுமான நிறுவனத்தின் சீராய்வு மனு நிலுவையில் உள்ளது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே தெளிவு கிடைக்கும். அதுவரை குழப்பமே நீடிக்கும்.

மேலும் இது சம்பந்தமான தெளிவாக தெரிந்து கொள்வதற்கு உங்களது ஆடிட்டர் (பட்டய கணக்காளர்) அல்லது வழக்கறிஞரிடம் கலந்தாலோசித்து தெளிவு பெற்றுக் கொள்ளவும். 

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை

வியாழன், 8 நவம்பர், 2018

சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

Article from:
Boldsky Bengali



drumstic tea for diabetes முருங்கைக் காயைத் தவிர்த்து முருங்கை இலை, பூ என எதைப் பார்த்தாலும் அதனுடைய லேசான கசப்புத் தன்மையால் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறோம். ஆனால் அதில் நிறைந்திருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வேறு எந்த உணவிலுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எந்தவித நோயுமே அண்டாமல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.


நன்மைகள்
முருங்கை மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்று. இதை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. முருங்கை இலைகளைப் பார்த்தாலே அலறி ஓடுகின்றவர்கள் கூட, சமீப காலங்களில் உணவில் மிக அதிகமாக முருங்கைக் கீரை மற்றும் காய்களைச் சேர்த்து வருகின்றனர். இதற்குக் காரணம் இப்போது தான் நாம் முருங்கையின் அருமைகளைப் பற்றி, புரிந்து கொண்டிருக்கிறோம்.



மரத்தின் பாகங்கள்நன்மைகள் முருங்கையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. முருங்கையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் உண்டாகின்ற ஏராளமான நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. குறிப்பாக, உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஜீரணக் கோளாறு ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு. கால்சியம், பொட்டாசியம் ஆகியவையும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்திருக்கின்றன.

மரத்தின் பாகங்கள் முருங்கை மரத்தில் உள்ள காய்கள், இலை, பூ மட்டும் தான் நமக்குப் பயன்படுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முருங்கை மரத்தினுடைய பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகிய எல்லாமே மருந்தாகப் பயன்படுகின்றன. நாட்டு மருத்துவத்தில் இவை எல்லாமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. 


ரத்த சர்க்கரைரத்த சர்க்கரை முருங்கை உடலுக்குள் இருக்கின்ற கொழுப்புகள் மற்றும் குளுக்குாஸின் அளவினைக் குறைக்கின்றது. இது உடலுக்குள் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இது உடலுக்குள் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்து சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளில் இருந்து முருங்கை முற்றிலும் உங்களைக் காப்பாற்றும். ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோயை உங்களை அடியோடு காப்பாற்றும்.

புண்களை ஆற்றும்
புண்களை ஆற்றும் முருங்கை இலையினுடைய இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு நம்முடைய உடலில் காயங்களை ஆற்றுவதற்கான தன்மைகள் அதிகமாக உள்ளது. இது காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.


செல்கள் பாதிப்பு முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் உங்கள் செல்களில் சேதம் உண்டாகாமல் தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. உடலுக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் இது உங்களுக்கு உதவுகிறது.

அழற்சி முருங்கை இலையின் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்புப் பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் சம்பந்தமான இதய நோய்கள்ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் நிறைந்திருக்கின்றன.

மூளை வளம் முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது.

கல்லீரல் முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.

கார்டிவாஸ்குலர் முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகின்றது.

பாக்டீரியா எதிர்ப்பு முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும் உதவுகிறது.

முருங்கை டீ முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.



ஞாயிறு, 28 அக்டோபர், 2018

புட்டபர்த்தி சாய் பாபா அறக்கட்டளை வழங்கும் இலவச மருத்துவ சேவை.





ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், ஒயிட்ஃபீல்ட், பெங்களூரு, 560 066 தொலைபேசி0091-80-28004600/28411500 இணையதளம்:https://sssihms.org

இந்த மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்:

1.     அனைத்து வித மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

2.     இந்த மருத்துவமனையில் பில் மற்றும் பணம் பெறுவதற்காக எந்தவொரு இடமும் இங்கு உருவாக்கப்படவில்லை.

3.     இந்த மருத்துவமனையில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

4.     இங்கு சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால் இங்கு யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என்பதுதான். மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பணிபுரியும் பணியாளர்கள் எவருக்கும் யாரும் ஒரு ரூபாய் கூட கொடுக்கத் தேவையில்லை.

5.     சிகிச்சை தேவைப்படும் யாவரும் தங்களது மருத்துவ பரிசோதனை முடிவுகளை இமெயில் மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்adminblr@sssihms.org.in.

6.     மேலும் தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் நகல்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

7. To,
Patient correspondence cell
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,
EPIP area, Whitefield
Bangalore – 560066

Karnataka

8.     மேலும் தங்களது பெயர், முகவரி, இமெயில் மற்றும் செல்பேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

9.     மருத்துவர்கள் ஆவணங்களைப் பரிசீலனை செய்து, தேவையான உதவிகள் செய்வார்கள்.


10.   மாலை 4 முதல் 6 மணி வரை தங்கள் உறவினர்கள் சிகிச்சை பெறும் நபர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படும்.