Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 28 மார்ச், 2022

முட்டாள் போன் பற்றி உங்களுக்குத்தெரியுமா?

Courtesy: http://cybersimman.com/2022/03/26/phones/?utm_source=feedburner&utm_medium=email


கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன் முதலில் முட்டாள் போன் என்றால் எது என தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் டம்ப் போன் (Dumbphone ) என சொல்லப்படும் பழைய கால போன் தான் முட்டாள் போன் என இங்கு குறிப்பிடப்படுகிறது.

டம்ப் போனை தமிழாக்கம் செய்யும் போது, பேசா போன் என சொல்லலாம். கூகுள் மொழியாக்கம் செய்யும் வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எனினும் பேசுவதற்கான சாதனத்தை பேசா போன் என எப்படி சொல்வது? எனவே தான், தற்போதைய திறன் பேசிகளுக்கு எதிரான தன்மை கொண்டிருப்பதால் பழைய கால போன்களை டம்ப் போன் என்கின்றனர். அதாவது, திறன் பேசியில் சாத்தியமாக கூடிய எண்ணற்ற வசதிகளும், அம்சங்களும் இல்லாமல் பேசுவது பற்று பேசுவது சார்ந்த சில கூடுதல் வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் பழைய கால போன்கள் அந்த தன்மைக்காக டம்ப் போன் என குறிப்பிடப்படுகிறது.

ஸ்மார்ட் போன் எல்லாம் வல்லவை என்றாலும், கவனச்சிதறலுக்கு வழி வகுப்பவை என்பதும், நம்மை நவீன சின்னத்திரைக்கு அடிமையாக்க கூடியவை என்பதாலும், அதன் பயன்பாட்டை குறைத்துக்கொள்வதே நல்லது என கருதப்படுகிறது. ஸ்மார்ட் போன் திரையில் ஓயாமல் அறிவிக்கைகளை பார்த்துக்கொண்டிருப்பதும், பக்கத்தில் இருப்பவருடன் கூட பேசத்தோன்றாமல் அதன் திரையில் லயித்திருப்பதும் நம் காலத்து கலாச்சார சீரழிவாக (!) கருதப்படுகிறது.

ஸ்மார்ட் போன் தொடர்பான பிரச்சனையை உணர்ந்தவர்கள், பலவிதங்களில் பழைய கால போனே சிறந்தது என நினைக்கின்றனர். புத்தாயிரம் தலைமுறை பழைய கால போன்களை காலாவதியான போன் என நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாக, அடிப்படை அம்சங்கள் கொண்ட பழைய போன் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என நினைப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

பழைய போனில் இருந்து முன்னேறி திறன்பேசிகள் வாங்க வேண்டும் என்பதே வெகுஜன எண்ணமாக இருந்தாலும், திறன்பேசிகளின் தீங்கை உணர்ந்து, அடிப்படை போனே போதுமானது என நினைப்பவர்கள் கருதுவதால் இவற்றை புத்திசாலிகளுக்கான போன் என்பது பொருத்தமாக இருக்கும்.

திறன்பேசிகளின் தொடர்புடைய எல்லையில்லா அம்சங்களுக்கு மாறாக, தேவையான அம்சங்கள் மட்டுமே கொண்டுள்ளதால், பழைய போனின் திறன்பேசி எதிர் தன்மையை குறிக்க இவற்றை முட்டாள் போன் எனலாம். போனோ அதை பயன்படுத்துபவரோ முட்டாள் அல்ல, மாறாக திறன்பேசியே உலகம் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தான் முட்டாள்கள் எனலாம்.

நிற்க, இந்த முட்டாள் போன்கள் தொடர்பான கருத்தாக்கம் இணையத்தில் வலுவான இயக்கமாக உருவாகி கொண்டிருக்கிறது. அது பற்றி அவ்வப்போது பார்க்கலாம்.

வியாழன், 24 மார்ச், 2022

ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும். உலகமே கிடைக்குமா...! இல்லை. தங்கம் கிடைக்கும்.

 சில வருடங்களுக்கு முன் ஒரு ரூபாய்க்கு என்ன வாங்கலாம்? என்றோ, புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா? என்றோ மக்களின் சஸ்பென்ஸை ஏத்திவிட்டு, கடைசியில் விசயம் தெரிந்தவுடன் நொந்து போனது போல் ஒரு செய்தியல்ல இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நீங்கள் தினமும் ஒரு ரூபாய்க்கு தங்கம் வாங்கவும், தேவைப்படும்போது விற்கவோ, அல்லது அல்லது டெலிவரி எடுத்து, நகை செய்யவோ முடியும்.


உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. என்னடா இது இவன் நேத்து வரைக்கும் நல்லாத்தான இருந்தான். சென்னைல வெயில் கூட அடிச்சு அதுல மூளை ஏதும் உருகிடுச்சா என நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது.

ஆனால் உண்மையாவே நீங்கள் ஒரு ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம். அதுவும் ஒரு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் .

உங்க மொபைல் போனில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் இருக்கா? கவலைய விடுங்க. தினமும் ஒரு டீ குடிக்கும் செலவில் தங்கம் வாங்கலாம்.

கூகுள் பே இல்லாதவங்க இந்த லிங்க் மூலமா உங்கள் மொபைல் ஃபோனில் செயல்படுத்துங்க. 

https://g.co/payinvite/M10aL

தினமும் உங்களால் முடிந்த தொகைக்கு தங்கம் வாங்கலாம் அல்லது விற்கலாம், உங்களுக்குத் தேவைப்படும்போது தங்கத்தை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். இந்த டிஜிட்டல் தங்கத்தை உங்களிடமிருந்து யாரும் திருட முடியாது. புயப்படாமல் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

https://bit.ly/3unvbcJ

கடந்த இரண்டு நாட்களில் சிறிது சிறிதாக சுமார் அரை கிராமுக்கு மேல் தங்கம் சேர்த்துவிட்டேன். இதே வேகத்தில் சென்றால் ஒரு வாரத்தில் சுமார் இரண்டு அல்லது மூன்று கிராம் தங்கமாவது சேர்க்க முடியும்.  விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் தங்கம் வாங்குவதா? முட்டாளா நீ ? என்று என்னை கேட்காதீர்கள். விலை அதிகமாக இருக்கும்போதும், விலை குறையும்போதும் தங்கம் வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் போது வாங்கிய தங்கத்தின் விலையும் விலை குறையும் போது வாங்கும் தங்கத்தின் விலையும் சராசரியுடன் ஒப்பிடும்போது லாபகரமானதாகவே இருக்கும். பங்குச்சந்தையில் பங்குகளின் விலை குறையும்போது வாங்கி ஆவரேஜ் செய்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுபோல்தான் இதுவும். தினமும் உங்களால் பத்து ரூபாய் சேமிக்க முடிகிறதாத்து ரூபாய்க்கு இன்றைய தேதியில் சுமார் ஒன்றரை மில்லி கிராம் தங்கத்தை வாங்கி உங்கள் லாக்கரில்  சேமிக்கலாம்.

தங்க நகையாக வாங்கினால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, மற்றும் நகைக்கடைக்காரர் உங்களுக்கு கொடுக்கும் மணிபர்ஸ், கட்டைப்பை எல்லாத்துக்கும் நீங்கள்தான் காசு கொடுக்கணும். ஆனால் இதில் அப்படியில்லை. நீங்கள் சேர்த்துவைத்து, தேவைப்படும்போது தங்கமாகவோ அல்லது விற்று பணமாகவோ பெற்றுக் கொள்ளலாம். நகையை வாங்கி வைத்து, அவசர ஆத்திரத்துக்கு விற்கப்போனால் அப்போதான் தெரியும், நகைக்கடைக்காரன் நூறு ரூபாய் மதிப்புள்ள கல்லுக்கும் தங்கத்துக்குண்டான விலையை உங்களிடம் வாங்கியதும், அரக்கு நிரப்பிய தங்க நகைக்கும், அஞ்சு ருபாய் கூட பெறாத அரக்கை நிரப்பி உங்களிம் பல ஆயிரங்கள் ஏமாற்றியதும் தெரிய வரும். டி.வி.யில் வரும் அந்த நடிகர் சொன்னார், இந்த நடிகை சொன்னார் என்று நகை வாங்கி ஏமாந்தது போதும். எம்.எம்.டி.சி, டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோம். நமக்குத் தேவைப்படும்போது விற்றுப் பணமாக்கலாம், எந்தவொரு நஷ்டமும் இல்லாமல், நாம் இருக்கும் இடத்திலிருந்து...!

கூடிய சீக்கிரம் உங்கள் லாக்கரில் இருக்கும் டிஜிட்டல் தங்கத்தை பொறுத்து நீங்கள் கடன் வாங்கலாம்.

 

மேலதிக தகவல் தேவைப்படுவோர் வாட்ஸப் மற்றும் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்

க.சங்கிலிக்காளை. வாட்ஸப், டெலிகிராம் செயலி தொடர்பு எண். 9600106471

இமெயில் முகவரி  : gsraj1979@gmail.com     

வியாழன், 17 மார்ச், 2022

இனிய செய்தி. கலசலிங்கம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கிருஷ்ணன் கோவிலில் (திருவில்லிப்புத்தூர், விருதுநகர் மாவட்டம்) உதயம்.

 

கல்வி வள்ளல் திரு. தி. கலசலிங்கம் ஐயா அவர்களின் உழைப்பால் உருவான கலசலிங்கம் கல்விக் குழுமம், 
1984 முதல் அவரது சீரிய முயற்சியாலும், உழைப்பாலும், அவரது புதல்வர் இளைய வள்ளல் பல்கலை வேந்தர் திரு. க. ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில், கல்வி வள்ளல் ஐயா கலசலிங்கம் அவர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவரின் சீரிய நிர்வாகத் திறமையாலும், பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக ஏற்றம் கண்டு, மற்றுமோர் மைல் கல்லாக கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அனுமதி பெற்றுள்ள செய்தியறிந்து நம் சமுதாயத்தினர் அனைவரும் மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்துள்ளனர்.

தற்போது திரு. சசி ஆனந்த் அவர்கள் இயக்குநராக பொறுப்பேற்ற பின் அவரது சீரிய நிர்வாகத்தில் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. தாத்தா கல்வி வள்ளல் அவர்களின் கனவை,
 தன் தந்தை இளைய வள்ளல் திரு. க. ஸ்ரீதரன் மற்றும் தாய் திருமதி. அறிவழகி அவர்களின் வழிகாட்டுதலுடன், தம்பி அர்ஜூன் அவர்களின் ஒத்துழைப்போடு, கல்வி நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து, நம் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரும் சேவையாற்றி வரும் இயக்குநர் திரு. சசி ஆனந்த் அவர்களின் தலைமையிலான நிர்வாகக் குழுவுக்கு பாராட்டுகளும், அன்பு கலந்த வாழ்த்துக்களும்.  


கடந்த 16-03-2022 நாளன்று பிறந்தநாள் கண்ட இளைய வள்ளல் க. ஸ்ரீதரன் அவர்களின் பிறந்த நாள் பரிசாக இந்த மருத்துவக் கல்லூரி உதயமாகியுள்ளது. பொதுவாக பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் பரிசு தருவதுதான் வழக்கம். ஆனால் நம் மதிப்பிற்கும்,  மரியாதைக்கும் உரிய இளைய வள்ளல் க. ஸ்ரீதரன் அவர்கள், 
தம் தந்தை கல்வி வள்ளல் அவர்களின் கனவுத் திட்டமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை துவங்கி,
 மிகவும் பின் தங்கியிருந்த நம் விருதுநகர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு மற்றுமொரு நிறுவனத்தை  உருவாக்கி, நம் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசினை வழங்கியுள்ளார். அவரின் சாதனைகளையும், அதன் மூலம் பின்தங்கிய பகுதிகளாக அறியப்பட்ட நம் விருதுநகர் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தை, சமகாலத்தில் வாழும் நாம் காண்பது மிகவும் பெருமிதமான ஒன்றாகும்.

நம் சமுதாய மக்களுக்கு மருத்துவக்கல்வி பயில ஒரு மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியும், கூடுதலாக வி.பி.எம்.எம். குழுமத்தால் துவக்கப்பட இருக்கும் மற்றும் ஓர் மருத்துவக்க கல்லூரியும், நம் பகுதி மக்களுக்கு கிடைக்க இருக்கும் மிகப்பெரும் வரங்களாகவே அமையும்.

விருதுநகர் மாவட்டத்தின் இராசபாளையம்,
 திருவில்லிப்புத்தூர், தேனி மற்றும் அருப்புக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள நமது சமுதாயத்தினர் வசிக்கும் கிராமங்களில் இருந்து மருத்துவ மேல் சிகிச்சைக்காக இதுவரை மதுரை அல்லது திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், குறித்த நேரத்தில் மேல் சிகிச்சை பெற முடியாமல் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாத சம்பவங்கள் நம் நினைவில் இடம் பெற்றிருக்கும் நிலையில், உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை துவங்குவதன் மூலம், நம் சமுதாயத்திற்கான சேவையை தம் லட்சியமாகக் கொண்டு இடையறாது சாதனை புரிந்துவரும் இளைய வள்ளல் திரு. க. ஸ்ரீதரன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்களையும், அன்பு கலந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

புதிதாக துவங்க இருக்கும் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து, இன்று ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதுடன், பலருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்குவதன் மூலம் பலரின் வாழ்வில் ஒளியேற்றும் நிர்வாகத்தினருக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்குவதற்கான நடைமுறைகளுக்குப் பின் முறையான அறிவிப்புடன் நடக்க இருக்கும் திறப்பு விழாவைக் காண காத்திருக்கிறோம். 

ஸ்ரீவில்லிப்புத்தூர், இராசபாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க இருக்கும் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வசதிக்காக விளம்பரம் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை. 

வாட்ஸப் / டெலிகிராம் தொடர்பு எண். +91 96001 06471

இமெயில் முகவரி: gsraj1979@gmail.com


சாலியர்குரல் மார்ச் 2022 மாத இதழ்

சாலியர்குரல் மார்ச் 2022 மாத இதழைப் படிக்க இங்கு தேர்வு செய்யவும்.