Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?

ஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர். 
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். 
அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். 
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. 
மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 
மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 
1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 
2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 
3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 
4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 
5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 
6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 
7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 
8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 
9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 
10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 
11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 
12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 
13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 
14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 
15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு :° வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

மக்கள் ஏன் உண்மைகளை வெறுக்கிறார்கள்?

Return to frontpage


நிபுணர்கள் சொல்லும் கருத்துகளைப் பெரும்பாலும் பலர் ஏற்க மறுக்கிறார்கள்

“இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்க சொல்றத எங்க கேக்குறாங்க?” என்று நம் ஊர்ப் பெரியவர்கள் புலம்புகின்றனர். அமெரிக்காவிலோ நிபுணர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பொதுமக்கள் பொருட்படுத்துவதில்லை என்ற ஆதங்கம் பரவிவருகிறது. அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனல்டு டிரம்ப் என்பவரின் கொள்கைகளை நிபுணர்கள் குறை சொல்கிறார்கள். ஆனால், பொதுமக்களோ அவற்றைக் கைதட்டி வரவேற்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தார்கள். ஆனால் விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்தது நமக்குத் தெரியும்!

பொருட்படுத்தாத மக்கள்
உலகளாவிய வெப்பநிலை மற்றும் வானியல் கூறுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மோசமான பாதிப்புகளைப் பற்றி எல்லா விஞ்ஞானிகளும் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல், கரிம எரியன்களைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்திக்கொண்டும் மரங்களையும் காடுகளையும் அழித்துக் கொண்டும் வருகிறார்கள். மக்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அறிஞர்களாலும் உளவியல் வல்லுநர்களாலும் விளக்க முடியவில்லை.

இதற்குச் சரியான காரணம், மக்கள் அடி முட்டாள்களாக இருப்பதுதான் என்று மக்களைத் தொடர்ந்து கூர்ந்து நோக்கி வரும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல... திருவாளர் பொது ஜனத்துக்கு அறிவுக்கூர்மை மிகக் குறைவு. போதுமான கல்வியறிவும், வாதப் பிரதிவாதங்களைச் சீர்தூக்கிப் பார்த்துச் சரியான முடிவுக்கு வரும் திறனும் பற்றாக்குறையாக உள்ளன என்றும் சொல்கிறார்கள். உண்மையில், எந்தவொரு பிரச்சினையையும் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து சரியான வழிகளைக் காட்டக்கூடிய சமூக மற்றும் அரசியல் தலைமைகளும் பற்றாக்குறையாகவே உள்ளன. சரியான தகவல்களும் தரவுகளும் மெனக்கெட்டுத் தேடப்படுவதில்லை.

மக்கள் முட்டாள்கள் அல்ல
தமது ஆலோசனைகள் ஏற்கப்படாதபோது, திருவாளர் பொதுஜனம் ஒரு முட்டாள் என்று வல்லுநர்கள் தீர்ப்பு சொல்வார்கள். ஆனால் அது சரியல்ல. பொது மக்களில் பெரும்பான்மையினருக்கு அடிப்படையான விஷயங்களையும், வாதங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் அடிப்படை அறிவு இருக்கவே செய்கிறது. அவர்களுடைய பொது அறிவும் கல்வித் திறனும் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இணைய வசதி இருந்தால், எந்தவொரு தகவலையும் முழுமையாகச் சில விநாடிகளில் திரட்டிவிட முடியும்.

அடுத்து, திருவாளர் பொது ஜனத்துக்கு, நிபுணர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் பேரிலான நம்பிக்கை குறைந்து வருகிறது என்ற கருத்து பரவியுள்ளது. அதுவும் தவறான கருத்து என்பதற்கான சான்றுகள் மேலும் மேலும் கிடைத்துவருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கல்வியாளர்களும் தொழிலியல் வல்லுநர்களும் 70% மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பதாகக் காட்டுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை 43% மக்களும், அரசு அதிகாரிகளை 38% மக்களும் மட்டுமே நம்புகிறார்கள்.

புத்திசாலிகளின் முட்டாள்தனம்
முக்கியமான விஷயங்களைப் பற்றி நிபுணர்கள் கூறும் கருத்துகளைப் பொது மக்கள் புறக்கணிப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மனித மனம் தகவல்களை எப்படிப் பகுப்பாய்வு செய்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மாட்ஸ் ஆல்வசன் என்பவர் ‘புரிந்துகொள்ள முடியாத முட்டாள்தனம்’ (The Stupidity Paradox) என்ற தலைப்பில் அதைப் பற்றி ஓர் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். உலகில் புத்திசாலித்தனமான மக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது என்றாலும், அவர்கள் ஏன் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர் வியப்பு தெரிவிக்கிறார். மனிதர்களின் உடன் பிறந்த விருப்பு - வெறுப்புகள், நம்பிக்கைகள், அல்லது தற்செயலான அறிமுகங்கள் அல்லது தொடர்புகள் போன்றவற்றின் அடிப்படையில் பலர் முடிவெடுக்கிறார்கள். இவ்வாறான சில முடிவுகள் இமைப்பொழுதில் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், அதன் பிறகு அந்த முடிவு சரியானதுதான் என்பதை நிரூபிக்கப் பல நாட்கள் தேவைப்படும். அதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

பெரும்பாலானவர்கள் ஒரு முடிவை எடுத்த பிறகே அதற்கான நியாயங்களையும் காரணங்களையும் தேடுகின்றனர். தமது திடீர் முடிவுகள் சரியானவையே என்று நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள். அவை தவறாக இருக்கலாம் என்று காட்டக்கூடிய தகவல்களைப் புறக்கணிக்கிறார்கள். தமது நம்பிக்கைகள் தவறானவை என்று நிரூபிக்கக் கூடிய தகவல்களைக் கண்டு சங்கடமடை கிறார்கள். தமது நம்பிக்கைகளையும் செயல்களையும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தத் தயங்குகிறார்கள்.

உணர்வு நிலை அபஸ்வரம்
அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து கள் பல வேளைகளில் சங்கடப்படுத்துகிறவையாகவே இருக்கும். தான் கொண்டிருந்த கருத்துகளைக் கைவிட வேண்டியிருப்பது வெட்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் தனது நிலையிலிருந்து இறங்கிவருவதை மிகுந்த மனக் கஷ்டத்துடனேயே செய்வார். அத்தகைய சங்கடமான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே மக்கள் முனைவார்கள். அதை ‘உணர்வு நிலை அபஸ்வரம்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். தமது நம்பிக்கைகளுக்கு முரணான தகவல்கள் எதிரிட்டால், நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வதைவிட தகவல்களை அவற்றுக்கேற்ப திரித்துக்கொள்வதையே மக்கள் விரும்புகிறார்கள். பல நிறுவனங்கள் நசித்துப்போனதற்கு, அவற்றின் நிர்வாகிகள் தாம் எடுத்த முடிவுகளுக்கு ஏற்றபடி தொழில்துறைப் புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிட்டதே காரணம்.

நிபுணர்களின் அறிவுரைகள் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதோ தமக்குச் சமமான அந்தஸ்தில் உள்ளவர்களுடன் ஆரோக்கியமற்ற விவாதங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பதோ மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக் காரணமாகின்றன. தமக்குச் சமமான இடத்தில் இருப்பவர்களின் மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதே நல்லது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகைய மனோபாவம் ஒரு வட்டத்துக்குள் சுமுகமான உறவுகளை வளர்த்து, அந்த வட்டத்திலிருந்து வெளியேற்றப்படாமலிருக்க உதவுகிறது. ஆனால், நீண்ட கால விளைவாக ஒரு மந்தை மனோபாவம் ஏற்பட்டுவிடக்கூடும். அதேசமயத்தில், வேறுவித மதிப்பீடுகளைக் கொண்ட இன்னொரு போட்டி மந்தை உருவாகிவிடும் ஆபத்தும் நேரும். அது முதல் மந்தையைவிட வலுவானதாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் இருந்துவிடக் கூடும்.

முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய பொருளாதார நிபுணர்களின் கருத்துகளைப் பொதுமக்கள் அவ்வளவாகப் பொருட்படுத்துவ தில்லை. பொருளாதார நிபுணர்களைவிடவும் அரசியல்வாதிகளே மக்களை அதிகமாகக் கவர்கிறார்கள். மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அதைத்தான் அரசியல் வாதிகள் பேசி மயக்குவார்கள். பொருளாதார நிபுணர்களைப் போல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்க மாட்டார்கள்!

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

கூகுள் தவிர நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தேடியந்திரங்கள்! http://cybersimman.com/


கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். இதில் சந்தேகமும் இல்லை: இதற்கு சான்றிதழும் தேவையில்லை. ஆனால் கூகுள் மட்டும் போதுமானதல்ல. இதை ஏற்கனவே நீங்கள் உணர்ந்திருக்கலாம். அல்லது இனி உணரலாம். எப்படியும் ஒற்றை தேடியந்திரத்தை மட்டும் சார்ந்திருப்பது நல்லது அல்ல. எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகளை நாடும் போது தேடியந்திர விஷயத்தில் மட்டும் நமது தேர்வை ஏன் குறுக்கி கொள்ள வேண்டும்.
எனவே கூகுள் தவிர வேறு தேடியந்திரங்களையும் நீங்கள் அறிந்திருப்பது உங்கள் இணைய அனுபவத்தை செழிப்பாக்கும். உங்களுக்கு கிடைத்த தேடல் முடிவுகள் சிறந்தவை தானா என்று ஒப்பிட்டு பார்ப்பது மாற்று தேடியந்திரங்கள் மூலம் தானே சாத்தியம்.
மாற்று தேடியந்திரங்கள் மட்டும் அல்லாமல், சிறப்பு தேடியந்திரங்கள் மற்றும் குறிப்பிட்ட நோக்கிலான பிரத்யேக தேடியந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இதன் பொருள் இன்றே கூகுளை விட்டு விட்டு வேறு தேடியந்திரத்திற்கு மாற வேண்டும் என்றில்லை. ஆனால், வேறு பல பொருடுத்தக்கூடிய தேடியந்திரங்கள் இருப்பதை தெரிந்து வைத்துக்கொண்டால் போதுமானது. அதன் பிறகு தேவை ஏற்படும் போது இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேடியந்திர பரப்பில் கூகுள் தவிர நூற்றுக்கணக்கில் தேடியந்திரங்கள் இருந்தாலும், அவற்றில் நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பத்து முக்கிய தேடியந்திரங்கள் இவை:
1. டக்டக்கோ: இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் தேடியந்திரம். கூகுள் போல உங்களின் ஒவ்வொரு இணைய அசைவையும் கண்காணிப்பதில்லை, உங்களைப்பற்றிய எந்த விவரத்தையும் சேமித்து வைப்பதில்லை என உறுதி அளிக்கும் தேடியந்திரம். கூகுள் இணையவாசிகளின் தேடல் சுவடுகளை விடாமல் கவனித்து விளம்பர வருவாய் பார்க்கிறது. இத்தகைய கண்காணிப்பை விரும்பாவிட்டால், டக்டக்கோ நல்ல தேர்வு.
இதன் தேடல் நுடமும் சிறந்தது தான். உடனடி தேடல் உட்பட பல்வேறு புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. பயன்படுத்திப்பார்த்தால் வியந்து போகும் வாய்ப்பு அதிகம்.; https://duckduckgo.com/
டக்டக்கோ பற்றி அறிய: http://bit.ly/2d5eSh2
2. வோல்பிராம் ஆல்பா: இது வழக்கமான தேடியந்திரம் அல்ல. கணக்கீடு இயந்திரம் என தன்னை வர்ணித்துக்கொள்கிறது. கூகுள் போல இணையத்தில் தேடி வந்து முடிவுகளை கொட்டுவதில்லை. ஆனால், தன்னிடம் உள்ள கணக்கிலடங்கா தரவுகளில் இருந்து தேடப்படும் பதத்திற்கு ஏற்ற தகவல்களை வரைபடமாக முன்வைக்கிறது. வழக்கமான தேடலைவிட, கணிதம், அறிவியல், புள்ளிவிரங்கள் சார்ந்த பிரத்யேக தேடலுக்காக அணுகும் போது அசர வைக்கும். ;https://www.wolframalpha.com/
வோல்பிராம் ஆல்பா பற்றி அறிய: http://bit.ly/2aFndTa
3. யாண்டெக்ஸ் : ரஷ்யாவின் கூகுள். சர்வதேச வடிவமும் இருக்கிறது. ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம். சொந்தமாக இணையத்தை துழாவி, இணையதளங்களை பட்டியலிட்டு, சொந்த அல்கோரிதம் அடிப்படையில் முடிவுகளை அளிக்கிறது. மொழிபெயர்ப்பு வசதி, இமெயில் ,பிரவுசர் என பல வசதிகளை கொண்டிருக்கிறது. தேடல் முடிவுகள் கூகுளில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். ; https://www.yandex.com
யாண்டெக்ஸ் பற்றி அறிய: http://bit.ly/2dybAyD
4. டாக்பைல்: இணையத்தின் பழைய தேடியந்திரங்களில் ஒன்று. இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. மெட்டா தேடியந்திர ரகத்தைச்சேர்ந்தது. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடி, பொருத்தமான முடிவுகளை பட்டியலிடுகிறது. பல தேடியந்திரங்களின் பலனை பெறுவது நல்லது தானே!http://www.dogpile.com/
டாக்பைல் பற்றி அறிய: http://bit.ly/2dybzLd
5. கிகாபிளாஸ்ட்: இன்னொரு பழைய தேடியந்திரம். சிறிய அளவில் துவக்கப்பட்டாலும், தனக்கென சொந்த தேடல் பட்டியல் மற்றும் தேடல் நுட்பம் கொண்டது. ஓபன் சோர்சிலானது என்பது இன்னும் சிறப்பு. ;http://www.gigablast.com
கிகாபிளாஸ்ட் பற்றி அறிய: http://bit.ly/2d8rjoy
6. பைண்ட்சவுண்ட்ஸ்: ஒலிகளை நாடுபவர்களுக்கான தேடியந்திரம். தேடல் என்பது தகவல்கள் சார்ந்தது மட்டும் அல்ல என உணரத்துவங்கி, ஒலி கோப்புகளை தேடும் போது இதன் அருமையை உணரலாம். ;http://www.findsounds.com 
பைண்ட்சவுண்ட்ஸ் பற்றி அறிய: http://bit.ly/2d8sft6
7.ஒன்லுக்: அகராதிகளின் அகராதி இந்த தேடியந்திரம். வார்த்தைகளுக்கான பொருளை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய அகராதிகளில் தேட உதவுகிறது. ஒரே இடத்தில் ஆங்கில வேட்டை நடத்தலாம். பொருளை விவரித்து வார்த்தையை தேடும் வசதி உட்பட எண்ணற்ற உப வசதிகள் உள்ளன.; http://www.onelook.com
ஒன்லுக் பற்றி அறிய: http://bit.ly/1Q8OuvM
8. ஷோடன்: திகில் தேடியந்திரம். திகலை தேட முடியாது. ஆனால் இதன் விளைவுகள் திகிலை ஏற்படுத்தக்கூடியது. தகவல்களை தேடுவதற்கானது அல்ல. இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள எண்ணற்ற சாதனங்களை தேடுவதற்கானது. எதிர்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடியது. https://www.shodan.io
ஷோடன் பற்றி அறிய: http://bit.ly/2d5ecbQ
9. வேர்ல்ட்கேட்: உலகம் முழுவதும் உள்ள நூலகங்களின் புத்தகங்களை தேட உதவும் தேடியந்திரம். புத்தக பிரியர்களில் துவங்கி ஆய்வாளர்களை வரை பலரை மகிழ்விக்க கூடியது. இதன் விரிவும், ஆழமும் அசர வைக்கும்.; http://www.worldcat.org/
வேர்ல்ட்கேட் பற்றி அறிய: http://bit.ly/2diX6RW
10. டி.எம்.ஓ.இசட்: இணையத்தின் நுழைவு வாயிலாக யாஹு கொடி கட்டிப்பறந்த காலத்தில், புதிய இணையதளங்களை கண்டறிய உதவிய அதன் கையேடு நினைவில் இருக்கிறதா? பல்வேறு தலைப்புகளின் கீழ், இணையதளங்களை வகைப்படுத்திய அந்த கையேடு போலவே அமைந்த அருமையான இணைய வழிகாட்டி டி.எம்.ஓ.இசட் தேடியந்திரம். ஓபன் சோர்ஸ் முறையிலானது. நீண்ட காலம் தாக்குப்பிடித்திருப்பதுடன் அன்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.; http://www.dmoz.org/
டி.எம்.ஓ.இசட் பற்றி அறிய: http://bit.ly/2d8rMHm
மாற்று தேடியந்திர பட்டியலில் தானாக இடம் பெறும் மைக்ரோசாப்டின் பிங் மற்றும் யாஹூ இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்க்.காம் கேள்வி பதில் தளமும் சேர்க்கப்படவில்லை. இது முழுமையான பட்டியல் அல்ல. தேடியந்திர பரப்பின் நீள அகலத்தை உணர்த்துவதற்கான பட்டியலே. இதில் பிலக்கோ மற்றும் பிளிப்பிகஸ் ஆகிய தேடியந்திரங்கள் இடம்பெற வேண்டும் என விரும்பினாலும் அவை இப்போது பயன்பாட்டில் இல்லை.
இந்த பட்டியலில் உள்ள அனைத்து தேடியந்திரங்கள் குறித்தும் தமிழ் இந்து இணைய பதிப்பில் எழுதி வரும், ஆ’வலை’ வீசுவோம் தொடரில் விரிவாக எழுதியுள்ளேன். அந்த கட்டுரைகளின் இணைப்புகள் தான் ஒவ்வொரு தேடியந்திரத்துடனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற வேண்டிய தேடியந்திரங்கள் இன்னும் ஒரு பட்டியல் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

புதன், 28 செப்டம்பர், 2016

தேடாததை தேட உதவும் தேடியந்திரம்!

Return to frontpage




தேடல் பட்டியலில் முதலில் இடம்பெறும் இணையதளங்கள் அனைத்தையும் விலக்கி விட்டு, தேட உதவும் விநோத தேடியந்திரம்.

மில்லியன் ஷார்ட் மிகவும் மாறுபட்ட தேடியந்திரம். அது முன்வைக்கும் தேடல் வாசகத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். வழக்கமாக எல்லா தேடியந்திரங்களும் நீங்கள் நாடி வருவதை தேடித்தருவதாக தெரிவிக்கின்றன என்றால், மில்லியன் ஷார்ட் (Million Short), நீங்கள் கண்டுபிடிக்காதது எதை? என்று கேட்கிறது. இந்த கேள்வியைத்தான் அதன் தேடல் வாசகமாகவும் அமைந்துள்ளது.

மற்ற தேடியந்திரங்கள் போல முன்னணி முடிவுகளை முன்னிறுத்தாமல், தேடல் பட்டியலில் கடைக்கோடியில் உள்ள இணையதளங்களை அது பிரதானமாக பட்டியலிடுகிறது. அதாவது, தேடல் பட்டியலில் முதலில் தோன்றக்கூடிய முதல் பத்து லட்சம் முடிவுகளை நீக்கி விட்டு, அதன் பின்னே இருக்கும் இணையதளங்களை பட்டியலிடுகிறது.

இதன்மூலம் இணையத்தில் வழக்கமாக கண்ணில் பட வாய்ப்பில்லாத இணையதளங்களை கண்டறியலாம் என்றும் அது ஊக்கமளிக்கிறது. இணைய உலகில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருக்கின்றன. கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு தந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளில் தேடல் என்பது முதல் சில பக்கங்களிலேயே முடிந்து போய் விடுகிறது.

கூகுளில் தேடும் ஒவ்வொரு முறையும் இத்தனை நொடிக்குள் (உண்மையில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்) இத்தனை லட்சம் பக்கங்களை பட்டியலிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தக் குறிப்பையே கூட பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். காரணம், தேடல் பட்டியலின் முதல் பக்கத்திலேயே பொருத்தமான இணையதளங்கள் பட்டியலிடப்படுவதால் பலரும் அதிலேயே திருப்தி அடைந்து வெளியேறி விடுகின்றனர். ஒரு சிலர் கூடுதல் முடிவுகளை நாடி மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பக்கங்களுக்கு சென்று பார்ப்பதுண்டு. எப்படி இருந்தாலும் அதிகபட்சம் முதல் பத்து பக்கங்களை தாண்டி செல்வது அரிதானதுதான்.

தேடலின் நோக்கமே தேவையான தகவல் அடங்கிய தளங்களை கண்டுபிடிப்பதுதான் என்னும்போது முதல் பக்கத்திலேயே நாடி வந்த தளம் இருந்தால் அதை தாண்டி செல்ல வேண்டிய அவசியம் என்ன?

எல்லாம் சரிதான், ஆனால் தேடல் பட்டியலில் நூறாவது பக்கத்திலோ அல்லது ஆயிரமானது பக்கத்திலோ அல்லது பத்தாயிரமாவது பக்கத்திலோ உள்ள தளங்கள் எப்படிப்பட்டவை என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஒரு சுவாரசியத்துக்கேனும் எப்போதாவது இணைய கடலில் ஆழச்சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?

மில்லியன் ஷார்ட் தேடியந்திரம் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. முன்னணி இணையதளங்களை கடந்து சென்று எங்கோ மூளையில் மறைந்து கிடக்கும் தளங்களை இந்த தேடியந்திரம் மூலம் காணலாம். அதாவது, தேடல் பட்டியலின் பத்தாயிரமாவது பக்கத்தில் உள்ள தளங்களை அல்லது பத்து லட்சமாவது பக்கத்தில் உள்ள தளங்களையோ இதன் மூலம் காணலாம்.

மில்லியன்ஷார்ட் தேடியந்திரம் இதனை எப்படி சாத்தியமாக்குகிறது என்றால், தேடலில் ஈடுபடும்போது தேடல் பட்டியலில் முதலில் உள்ள பக்கங்களை நீக்கிவிட வழி செய்கிறது. முகப்புப் பக்கத்தில் தேடல் கட்டம் அருகே இதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி முதல் நூறு பக்கங்களையோ, முதல் ஆயிரம் பக்கங்களையோ, முதல் லட்சம் பக்கங்களையோ அல்லது முதல் மில்லியன் பக்கங்களையோ நீக்கி விட்டு எஞ்சியுள்ள பக்கங்களை காணலாம்.

தேடலில் ஈடுபடும்போது ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து பார்த்தாலும் பத்து பதினைந்து பக்கங்களை கடந்த பிறகு ஒரு அலுப்பும் களைப்பும் வந்து விடும் அல்லவா? மில்லியன்ஷார்ட்டோ ஒரே கிளிக்கில் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக கடந்து பட்டியலின் கடைக்கோடியில் உள்ள தளங்களை காண வழி செய்கிறது.

பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தத் தளங்கள் பயனில்லாதவையாக இருக்கலாம். அல்லது இவற்றில் சில முத்துக்களும் இருக்கலாம். இவற்றை கண்டறிய மில்லியன் ஷார்ட் வழி செய்கிறது. இப்படி முடிவுகளை கண்டறிவது வெறும் சுவாரஸ்யம் மட்டும் அல்ல, இணையவாசிகளின் கண்களை மூடும் தேடல் குமிழ், விளம்பர நோக்கிலான பக்கங்கள், எஸ்.இ.ஓ ஜாலங்கள் அவற்றை எல்லாம் விளக்கி விட்டு நல்ல இணையதளங்களை கண்டறிய உதவுகிறது.

நல்லதொரு மாற்று தேடியந்திரமாக உருவாகி இருக்கும் மில்லியன்ஷார்ட் 2012-ம் ஆண்டு அறிமுகமானது. கனடாவில் குடியேறிய இந்தியரான சஞ்சய் அரோரா, தனது எக்ஸ்போனன்ஷியல் லேப்ஸ் நிறுவனம் மூலம் இந்தத் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில், சோதனை முயற்சியாகவே இதை அவர் துவக்கினார்.

இணையத்தில் உள்ள சில லட்சம் தளங்கள் திடிரென காணாமல் போய்விட்டால் என்ன ஆகும் என ஒரு நாள் அரோரா கற்பனை செய்திருக்கிறார். இந்தக் கற்பனையே மில்லியன்ஷார்ட் தேடியந்திரமாக உருவானது.

பெரும்பாலும் இணையத்தில் தேடும்போது, விக்கிபீடியா, அபவுட்.காம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களின் முடிவுகளே முன்னுக்கு வருவதில் இருந்து மாறுபட்ட அனுபவம் தேடலில் தேவை என்பது அவரது கருத்தாக இருக்கிறது.

மில்லியன்ஷார்ட், மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை அடிப்படையாக கொண்டு தேடல் பட்டியலை அளிப்பதோடு தனது சொந்த தேடல் நுப்டங்களையும் பயன்படுத்தி அதை மேம்படுத்தி தருகிறது. இதில் தேடல் முடிவுகளை நீக்காமல் தேடும் வசதியும் இருக்கிறது. தேவையான அளவு முடிவுகளை நீக்கியும் தேடலாம். இது தவிர, விளம்பர பக்கங்கள், அரட்டை வசதி கொண்ட பக்கங்கள், மின்வணிக பக்கங்கள் ஆகியவற்றை நீக்கிவிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.

சோதனை நோக்கில் நிறுவப்பட்ட இந்தத் தேடியந்திரம், தேடலை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் தேடியந்திரமாக வளர்ந்திருக்கிறது. பிரவுசர்களில் நீட்டிப்பாக பயனபடுத்தும் வசதியும் இருக்கிறது.

மில்லியன் ஷார்ட் தேடியந்திர முகவரிhttps://millionshort.com/

* குறிப்பு: இணையவாசிகளின் இருப்பிடம், அவர்களின் கடந்த கால இணைய தேர்வுகள் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான தேடல் முடிவுகள் முன்வைக்கப்படுவது தேடல் குமிழ் எனப்படுகிறது. இதன் மூலம் இணையவாசிகள் பொதுவாக எல்லோரும் பார்க்க கூடிய தேடல் பட்டியலை பார்க்க முடியாமல் போகலாம்.

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள் - எஸ்.ஜி. நடராஜன்








ஏழுர் சாலியர் சமுதாயத்தில் அவதரித்த ஸ்ரீவி. போத்தீஸ் நிறுவனத்திற்கு அடித்த-படியில் ஜவுளித்துறையில் வெற்றி கண்டவர்கள் தேனி ஆனந்தம் என்ற ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு, எஸ்கே என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஜி. நடராஜன் அவர்களும் மற்றும் அதன் பங்குதாரர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் ஆகிய எம் மண்ணின் மைந்தர்களானவர்கள் தான் சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி தாலுகா, சுந்தரபாண்டியத்தை சிறப்பு செய்யும் திரு நடராஜன் அவர்கள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தாலும், இளம்-வயதிலேயே வேளாண்மையிலும், வணிகத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என கொண்டு எத் தொழிலையும் சிறப்புடன் நடத்தும் பாங்கு அவருக்கு உண்டு, கல்வியிலும் எம்.காம் படித்து அரசு வேலை வாய்ப்பிற்கு செல்லாமல் வணித்தில் நாட்டம் கொண்டு அவர்களுடைய மளிகைக்கடை, சுந்தரமகாலிங்கம் எண்டர்பிரைசஸ் என்ற உரக்கடை மற்றும் கற்பகம் டெக்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவத்தினை அவர்களின் கூட்டுக் குடும்பத்துடன் சிறப்புடன் நடத்தி வெற்றிபெற்ற அனுபவம் கொண்டவர். எத்தொழில் செய்தாலும் அதில் ஒரு முத்திரை பதிக்கும் திறன் கொண்டவர் எஸ்கே. அவர்கள். உரக்கடை நடத்தும் போதும் சரி ஜவுளி வியாபாரத்திலும் சரி வாடிக்கையாளர்களை கவரும் மனப்பாங்கு அவருடைய தனி சிறப்பு, உரக்கடையில் வேளாண்மருந்து, உரம் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடை திருப்தியே தனது திருப்தி என்று செயல்படும் தன்மை கொண்டவர், வியாபாரம் முக்கியமல்ல என்பதை நன்கு உணர்ந்தவர், இதற்காக வேளாண் துறை அலுவலர்களிடம் தானே பயிற்சி கொண்டு செயல்படுவது அவரின் தனி சிறப்பு, இத்தன்மை கொண்டதால்தான் திரைகடல் ஒடி திரவியம் காண்பதுபோல் தேனி தனக்கு வியாபார தலமாக கொண்டு தேர்வு செய்து, தேனி ஆனந்தம் என்ற பட்டு ஜவுளி ஸ்தாபனம் அமைத்து முதல் சிகரம் தொட்டார்,


இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தனது மைத்துனர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் அவர்கள்தான், இவர்கள் இருவரும் அந் நிறுவனத்தின் தூண்காளாக இருந்து தோள் கொடுத்தவர்கள்.


    தேனியில் வளர்ச்சி கண்டபோது தினமலர் நாளிதழ்க்கு பேட்டி கொடுத்த செய்தியையும் இங்கு வைத்துள்ளேன், அவர் அந்நாளில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கைத்தறி தொழில் நலிவுற்றபோது அரசு கஞ்சித்தொட்டியில் கஞ்சிவாங்கிக் குடித்த அனுபவத்தையும் காட்டியுள்ளார். தேனி நகரில் வளர்ச்சி கண்டபோது புதிய ஜவுளி ஷோரூம் திறப்பு விழாவிற்கு அமைச்சரர் திருமிகு பன்னீர்செல்வம் திறந்து சிறப்பு பெற்றதையும் காணலாம்,


அவரின் வளர்ச்சி சாலியர் சமுதாயத்தினரின் போத்தீஸ் நிறுவனத்திற்கு அடுத்த படிக்கல்லாக சிகரம் தொட்டு வருகிறார் என்பது மிகையாகாது, அதன் அடிப்படையில்தான் தற்போது காணும் திண்டுக்கல் புது ஜவுளி மாளிகை திறப்பு விழா




வளரட்டும் அவ்வணிய வளாகம், அதன் அடிப்படையில் உயரட்டும் வேலை வாய்ப்பும் அதனைச்சார்ந்த சமுதாய வளர்ச்சியும்

தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

திருவண்ணாமலை கிரிவலம்... அது தருமே உயிர்பலம்!

முக்தி தரும் சிவத்தலங்கள்
காசியில் இறக்க முக்தி
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
திரு அண்ணாமலையில் நினைக்க முக்தி

இவைகளி்ல் எளியவழியில் முக்தி பெற வழிகொடுக்கும் தலம் அண்ணாமலை

திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம்.  இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர்.  இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,

‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்

வெண்பாப் பயிராய் விளையுமலை,’

எனக்கூறினார்.

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்   கிரிவலம் வருவது வாடிக்கை. முழு நிலவொளியில் ஈசனை மனதில் நிறுத்தி, 'அருணாச்சலேஸ்வரா' என்று முணுமுணுத்தவாறே வருவதில் உள்ள சுகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். கிரிவலம் செல்லும்போது வழியில், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கும். 

சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்துப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இறுதியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலம்தான் திருவண்ணாமலை.

கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில்தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகின்றது.


திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்கு பக்தர்கள் அவரவரது தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம்.


மலை முழுவதுமே அருணாச்சலேஸ்வரரே வியாபித்திருக்கிறார் என்பதால், ,கிரிவலம் முடித்ததும் சுவாமி தரிசனம் செய்யத் தேவையில்லை. இதனால், பலர் முதல் நாளே அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவார்கள். கிரிவலப்பாதை முழுவதும் 400 ரூபாயிலிருந்து குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன.


கிரிவலம் செல்லும்போது கால்களில் செருப்பு இல்லாமல், செல்வது நல்லது. மலை முழுவதும் ஒவ்வொரு அடியிலும் பல நூறு லிங்கங்கள் பதிந்து இருப்பதாக ஒரு நம்பிக்கை உலவுகிறது. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.

கிரிவலம் வரும்போது நண்பர்களுடனோ குழுவாகவோ வந்தாலும் தேவையற்ற வீண் பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் ஆகியவற்றை தவிர்த்து சிவாய நமவென ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறே நம் பயணத்தைப் பூர்த்திசெய்வது நல்லது. 

கிரிவலப் பாதையில் நடக்கும்போதே நமக்கும் இறைவனுக்குமான (ஆத்ம நிவேதனம்) உரையாடல் தொடங்கிவிடும். மனம் ஒடுங்குதலாகி, ‘நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப்போகின்றோம்?’ என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழத் தொடங்கிவிடும். அந்த சிந்தனைகள் நம் மனத்தை சுத்தம் செய்து நமக்கான வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக்கி விடும். 

கிரிவலம் உடல், மனம் இரண்டுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும். தேக பலமும் தெய்வ பலமும் ஒன்றாகி நமக்கு உயிர் பலம் தந்திடும்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு ° வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

புதன், 21 செப்டம்பர், 2016

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு

Dinakaran Daily News



காய்ச்சல் என்பது உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் வருகிறது. காய்ச்சலால் உடல் வற்றிப்போகும். உடல் வலி ஏற்படும். காய்ச்சல் என்பது இன்னொரு நோய்க்கு  அடையாளம். கிருமிகளின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் பாதிப்பை எடுத்து காட்டுவதாக காய்ச்சல் இருக்கிறது. இனிவரும் காலம் மழை, பனி காலம் என்பதால்,  சிக்கன் குன்யா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட பலவகை  காய்ச்சல் வரவாய்ப்புள்ளது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காய்ச்சலை குணப்படுத்த கூடிய  மருத்துவம் குறித்து பார்க்கலாம். நிலவேம்பை பயன்படுத்தி டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். 

ஒரு ஸ்பூன் நிலவேம்பு குடிநீர் சூரணம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் நன்றாக கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளை  குடித்துவர காய்ச்சல் குணமாகும். மூட்டு வலி சரியாகும். சாதாரணது முதல் டெங்கு உள்ளிட்ட அச்சுறுத்த கூடிய எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும்  மூலிகைகள் நமக்கு பயன் தருகிறது. குறிப்பாக நிலவேம்பு சிறந்த மருந்தாகிறது. இது மிகுந்த கசப்பு சுவை உடையது. விஷத்தை முறிக்க கூடியது.  நுண்கிருமிகளை போக்கும் தன்மை கொண்டது. வியர்வையை தூண்டக் கூடியது. 

சதாராண காய்ச்சல், மலேரியா, காசநோயால் வரும் காய்ச்சல், யானைகால் நோயால் ஏற்படும் காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்த நிலவேம்பு குடிநீர்  பயன்படுகிறது. காய்ச்சலின் போது ஏற்படும் மூட்டு வலி, உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 பவளமல்லி இலைகள், 4 சீந்தில் இலைகள்  ஆகியவற்றை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி உணவுக்கு  முன்பு ஒருவேளை குடித்துவர விஷ காய்ச்சல் குணமாகும். மூட்டு, முதுகு, கழுத்து வலி சரியாகும். 

சீந்தில் சாலை ஓரங்களில் வளர்ந்து மரம் முழுவதும் படர்ந்து காணப்படும் மூலிகை. இதை அடிக்கடி பயன்படுத்தி வருவதால் ஆயுள் அதிகரிக்கும். இது பல்வேறு  சத்துக்களை உள்ளடக்கியது. காய்ச்சலை போக்கும். வலியை குறைக்கும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. டெங்கு காய்ச்சலின்போது, ரத்த வட்ட அணுக்கள்  குறைபாடுகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். பப்பாளி இலையை அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்த வட்ட  அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

டெங்கு காய்ச்சல் உடலை முடக்க செய்ய கூடியதாக உள்ளது. மூட்டு வலி, வீக்கம் தரக்கூடியது. இதனால் ரத்த சோகை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்.  ரத்த வட்ட அணுக்களை அதிகரிப்பதில் பப்பாளி இலை அற்புதமான மருந்தாகிறது. இது காய்ச்சலை தணிக்கிறது. வலியை குறைக்கிறது. நோயை எதிர்த்து  நிற்கும் சக்தியை கொடுக்கிறது. பப்பாளி மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது நல்லது. பசியின்மை, உணவில் விருப்பமின்மையை போக்கும் மருத்துவம் குறித்து  பார்க்கலாம். பசியின்மைக்கு கத்தரிக்காய் அற்புதமான உணவாகிறது. இதில் கந்தக சத்து அதிகம் உள்ளது. இது, அதிக உஷ்ணம் தரக்கூடியதால், உள் உறுப்புகளை  தூண்டும் தன்மை கொண்டது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் பசியை தூண்டும். 


அறிவோம் நம் மொழியை: எழுவாயை எங்கே வைப்பது?


Return to frontpage


இந்த வாக்கியத்தைப் பாருங்கள்: ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.’ இதில் திருவல்லிக்கேணியில் வசித்தது யார் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இறந்தது யார் என்பது தெளிவாக இருக்கிறதா?

ஒரு வாக்கியத்தில் எழுவாயை எங்கே அமைப்பது என்பதில்தான் சிக்கல். இந்த உதாரணத்தைப் பாருங்கள்: ‘1995-ல் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் திரைப்படமாக்கப்பட்டது’. 

ஜானகிராமன் 1964-ல் இந்த நாவலை எழுதினார். அது படமாக்கப்பட்டது 1995-ல். ஆனால் இந்த வாக்கியத்தைப் படிக்கும் ஒருவர் ஜானகிராமன் 1995-ல் நாவல் எழுதியதாகக் கருதிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாக்கியம், ‘தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் 1995-ல் படமாக்கப்பட்டது’ என்பதாக இருந்தால் எந்தக் குழப்பமும் வராது அல்லவா?

ஆண்டுகள், விவரங்கள், வர்ணனைகள் ஆகியவற்றை எங்கே பொருத்துவது என்பது முக்கியம். 

‘சாகாவரம் பெற்ற பரசுராமரின் தந்தை ஜமதக்னி’ என்று எழுதினால், சாகாவரம் பெற்றவர் பரசுராமரா அவரது தந்தையா என்னும் குழப்பம் வரலாம். ‘பரசுராமர் சாகாவரம் பெற்றவர்; அவரது தந்தை ஜமதக்னி’ என்று எழுதலாம். அல்லது, ‘ஜமதக்னியின் மகன் பரசுராமர் சாகாவரம் பெற்றவர்’ என்று எழுதலாம். ‘மருத்துவர் பட்டம் பெற்ற தென்னரசுவின் தந்தை புவியரசு’ என்பதாகச் சமகால உதாரணமாக மாற்றியும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

இன்னொரு உதாரணம் பாருங்கள்: ‘இந்த அங்கீகாரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஊக்கம்.’ எது தொடர்ந்து இயங்க வேண்டும்? அங்கீகாரமா? ‘தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஊக்க மருந்து இந்த அங்கீகாரம்’ என்று எழுதினால் எந்தக் குழப்பமும் இல்லை. இங்கே அங்கீகரம் என்னும் எழுவாய் இடம் மாறியதும் தெளிவு பிறக்கிறது.

‘அந்தக் கச்சேரிக்காக மயிலாப்பூர் சபா என்று அழைக்கப்பட்ட அரங்கத்தை ஒப்பந்தம் செய்தார்கள்.’ அந்தக் கச்சேரிக்காகத்தான் அது மயிலாபூர் சபா என அழைக்கப்பட்டதா? ‘மயிலாபூர் சபா என்று அழைக்கப்பட்ட அரங்கத்தை அந்தக் கச்சேரிக்காக ஒப்பந்தம் செய்தார்கள்’ என்று சொல்லும்போது பொருள் குழப்பமின்றித் துலங்குகிறது. எது, எங்கே, என்ன என்பனவற்றைக் கூடியவரையில் அருகருகே அமைத்துவிடுவதே நல்லது.

‘எல்லாமே சரியான தருணத்தில் மேற்கொள்வதில்தான் அடங்கி யுள்ளன’ என்ற வாக்கியத்தை ‘சரியான தருணத்தில் மேற்கொள் வதில்தான் எல்லாமே அடங்கி யுள்ளன’ என்று எழுதும்போது எது, என்ன, ஏன், எப்படி என்ற குழப்பங்கள் நேர்வதில்லை.

எல்லாம் சரி, இறந்துபோனது சங்கரனா அல்லது அவரது தாயாரா என்னும் வாக்கியத்தில் உள்ள குழப்பத்தை எப்படித் தீர்ப்பது என்று கேட்கிறீர்களா? விக்ரமாதித்தனாலும் பதில் சொல்ல முடியாத வேதாளத்தின் கேள்விபோலத்தான் இது. இந்த வாக்கியத்தை உடைக்காமல் இதற்குத் தீர்வு காண முடியாது (இறந்தது சங்கரன் என்றோ அல்லது அவரது தாயார் என்றும் அனுமானித்துக்கொண்டு இந்த வாக்கியத்தை ஒரே வாக்கி யத்தில் குழப்பமில்லாமல் எழுத முடியுமா என்று முயற்சிசெய்து பருங்கள்).



இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்! http://cybersimman.com/2016/09/09/email-40/


best-email-tricks-you-arent-using-canned-emailsபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலக தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. பலர் இமெயிலிலேயே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடும் நிலையும் இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக இமெயில்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில:

* உடனடி மெயில் வாசகங்கள்
இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ’கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/# ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இமெயிலுக்காக தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கலாம். எப்படி என்றால், எப்போதெல்லாம் வழக்கமான பதில்களை இமெயிலில் அனுப்ப நேருகிறதோ அப்போது இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, இதில் உள்ள வாசகங்களை அப்படியே நகலெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இமெயில்களை அனுப்பும் போது மெயிலின் உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். எனவே இதற்காக நேரம் ஒதுக்கி தனி கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி செய்ய வேண்டும் என்றில்லை. சில நேரங்களில் மிகவும் சம்பிரதாயமான பதிலை அனுப்பினால் போதும். இன்னும் சில நேரங்களில் வழக்கமான வாசகங்களை டைப் செய்தால் போதும். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். இது போன்ற நேரங்களில் ஒரே விதமான மெயிலை மீண்டும் டைப் செய்வது நேரத்தை வீணாக்கும் என்பதோடு, அலுப்பாகவும் அமையும்.
இந்த பிரச்சனைக்கான அழகான தீர்வாக தான் கேன்ட் மெயில் அமைகிறது. வழக்கமாக எதிர்கொள்ளக்கூடிய தருணங்களுக்கான மெயில் வாசகங்கள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பிரச்சனைக்காக மன்னிப்பு கோருவது, சேவையை ரத்து செய்து பணம் திரும்ப கோருவது, முந்தைய மெயிலுக்கு நினைவூட்டல் அனுப்புவது, மன்னிக்கவும், விருப்பமில்லை என சொல்வது என வரிசையாக பல தருணங்களான ரெடிமேட் மெயில் வாசகங்களை இந்த தளத்தில் பார்க்கலாம். எது தேவை என தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லது ஒரு சில வார்த்தைகளை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் அமைந்திருப்பது மட்டுமே ஒரே குறை!
best-email-tricks-you-arent-using-thisemailxyz
* இமெயில் வடிவங்கள்
best-email-tricks-you-arent-using-thisemailxyzகேன்ட் மெயில் தளம் போலவே, ’காண்டாக்ட்வலி டெம்பிளேட்ஸ்’ (http://templates.contactually.com/ ) பொருத்தமான இமெயில் உள்ளட்டக்கத்தை தேர்வு செய்வதற்கான தளம் என்றாலும் அதைவிட மேம்பட்ட சேவை இது. சூழ்நிலைக்கு ஏற்ற மெயில்களை இதில் நாமாக உருவாக்கி கொள்ளலாம். இதற்கென சிறிய விண்ணப்ப படிவம் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இமெயில் அனுப்புவது யாருக்கு, அதன் நோக்க என்ன எனும் கேள்விகளுக்கான பதில்களை தேர்வு செய்தால் போதும் அதற்கேற்ற பொருத்தமான மெயில் மாதிரியை உருவாக்கித்தருகிறது.
* இணையதளமாகும் இமெயில்
உங்கள் இமெயிலை ஒரு இணையதள பக்கமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது திஸ் இமெயில் இணையதளம். ( http://www.thisemail.xyz/). உங்களுக்கு வரும் இமெயில்களில் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றும் போது, இந்த சேவை கைகொடுக்கும். மெயிலை பகிர்ந்து கொள்ள எளிய வழி அதை அப்படியே பார்வேர்டு செய்வது தானே என நினைக்கலாம். ஆனால் இப்படி செய்வதன் மூலம் உங்கள் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பலருக்கு அனுப்ப விரும்பினால் சிக்கல் தான். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் பகிர விரும்பும் மெயிலை இந்த தளத்திற்கு பார்வேர்டு செய்தால், அந்த மெயிலை ஒரு இணைய பக்கமாக மாற்றி, அதற்கென ஒரு இணைய முகவரியையும் உருவாக்கித்தருகிறது. இந்த இணைய முகவரியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் போதும். உறுப்பினராக பதிவு செய்து கொள்ளாமலேயே எளிதாக பயன்படுத்தக்கூடிய சேவை இது!

* இமெயில் பாதுகாப்பு!
பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள சேவைகளில் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் தேவை ஏற்படும் போது நேரடியாக முகவரியை டைப் செய்யாமல் ஸ்கிரிம் ( http://scr.im/) தளம் வழியே அதை செய்வது நல்லது. ஏனெனில் இணையத்தில் பொது வெளியில் பகிரப்படும் இமெயில் முகவரிகளை அறுவடை செய்வதற்கு என்றே விளம்பர நிறுவனங்கள் பாட்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. சமூக ஊடகங்களில் மெயில் முகவரிகளை வெளியிடும் போது இந்த பாட்கள் அவற்றை ஸ்கேன் செய்து சேகரிக்கின்றன. இதனால் ஸ்பேம் மெயில் தொல்லை அதிகமாகலாம். இதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஸ்கிரிம், இமெயில் முகவரியை பாட்கள் ஸ்கேன் செய்ய முடியாத வகையில் பாதுகாப்பாக மாற்றித்தருகிறது.
இமெயில் சுருக்கம்
பை.சென்டன்சஸ் ( http://five.sentenc.es/) தளம் இமெயில் பயன்பாட்டில் நேரடியாக உதவக்கூடிய சேவை இல்லை. ஆனால் இமெயில் பயன்பாட்டில் நினைவு கொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையை இந்த தளம் வழங்குகிறது. இமெயிலுக்கு என அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கும் வகையில், ஐந்து வரிகளில் எல்லா மெயில்களையும் முடித்துக்கொள்ள்வும் என்பது தான் அந்த ஆலோசனை.
இமெயிலை அனுப்பவும், பதில் அளிக்கவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பது பிரச்சனை என குறிப்பிடும் இந்த தளம் இதற்கான தீர்வு, குறுஞ்செய்திகள் போல இமெயில் பதில்களுக்கும் ஒரு வரம்பு தேவை என வலியுறுத்துகிறது. இதற்காக, எல்லா மெயில்களுக்கும் ஐந்து வரிகள் அல்லது அதற்கு குறைவாக பதில் அளிக்க வேண்டும் எனும் கொள்கையை கடைபிடிக்கவும் என்றும் வலியுறுத்துகிறது.
இமெயில் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்க கூடிய சுவாரஸ்யமான இணையதளம்!